
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் அச்சம்; உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்
செய்தி முன்னோட்டம்
பாதுகாப்பு கருதி உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்திய அணி விலக முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 14 முதல் 23 வரை எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
காசாவின் நிலைமை மற்றும் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த செஸ் சாம்பியன்ஷிப்பில் 12, 10 மற்றும் 8 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு போட்டிகள் திட்டமிடப்பட்டன.
முன்னதாக, போட்டிக்காக இந்திய தரப்பில் இருந்து சுமார் 80 பேர் ஷர்ம் எல்-ஷேக்கிற்கு போட்டிக்காக பயணிக்க இருந்தனர்.
மேலும், போட்டியை ஒத்திவைக்க உலக செஸ் அமைப்பிடம் (FIDE) இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஐசிஎஃப் அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்
The Indian Chess delegation withdrew from the World Cadet Chess Championship 2023 at Sharm el Sheikh, Egypt from October 14th to 23rd. pic.twitter.com/Yw59kANz9V
— ANI (@ANI) October 13, 2023