உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்!
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்து வரும் ஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெள்ளிக்கிழமை (மே 12) வெண்கலப் பதக்கம் வென்றார். ஹுசாமுதீன் தனது காலிறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக 54-57 கிலோ எடைப்பிரிவில் நடந்த அரையிறுதியில் கியூபாவின் ஹோர்டா ரோட்ரிக்ஸ் டெல்-ரேக்கு வாக்ஓவர் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. ஹுசாமுதீன் காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான பல்கேரிய வீரரான ஜேவியர் இபனெஸ் டயஸை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர தீபக் போரியா மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோர் தங்கள் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.