NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமனம்!
    வங்கதேச அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

    வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமனம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 01, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு வருட காலத்திற்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் செவ்வாய்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

    முன்னதாக 2014 முதல் 2017 வரை வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஹத்துருசிங்க, பிப்ரவரியில் பயிற்சியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் வங்கதேச டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில், ஹத்துருசிங்க எந்த கிரிக்கெட் வடிவங்களுக்குப் பொறுப்பேற்பார் என்பது உறுதி செய்யப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளதால், அதற்கு பயிற்சி அளிக்கும் வகையில், ஒருநாள் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    வங்கதேச கிரிக்கெட் அணி

    சண்டிக ஹத்துருசிங்கவின் கீழ் வங்கதேசத்தின் செயல்திறன்

    வங்கதேசத்தின் பயிற்சியாளராக இருந்த அவரது முந்தைய பயிற்சி காலத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி வென்றது.

    மேலும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் வெற்றிகளையும் வங்கதேச கிரிக்கெட் அணி பெற்றது.

    2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசமும் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஹத்துருசிங்க, "வங்கதேச தேசிய அணிக்கு மீண்டும் ஒருமுறை பயிற்சியாளராக இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு கிடைத்த மரியாதை. நான் அங்கு சென்ற போதெல்லாம் மக்களின் அரவணைப்பு மற்றும் கலாச்சாரத்தை நான் மிகவும் விரும்பினேன். மீண்டும் ஒருமுறை வீரர்களுடன் பணியாற்றவும், அவர்களின் வெற்றிகளை அனுபவிக்கவும் ஆவலுடன் உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025