NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!
    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 07, 2023
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    துருக்கிய கிளப்பான ஹேடேய்ஸ்போர் அணிக்காக விளையாடும் கானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீரர் அட்சு, இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

    மேலும், ஹேடேய்ஸ்போர் கிளப்பின் இயக்குனர் டேனர் சாவுட்டும் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருப்பதாக நம்பப்படுவதாகவும், கிளப் அதிகாரிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அணியின் செய்தித் தொடர்பாளர் ஒசாட் கூறினார்.

    இதற்கிடையே , மேலும் இரண்டு ஹேடேய்ஸ்போர் வீரர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக உள்ளதகா ஒசாட் கூறினார்.

    கிறிஸ்டியன் அட்சு

    நிலநடுக்கத்தால் வரலாறு காணாத பேரழிவு

    7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவின் பெரும்பகுதியை திங்கள்கிழமை (பிப்ரவரி 6) அதிகாலையில் உலுக்கியது.

    இந்த நிலநடுக்கம் துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸை மையமாகக் கொண்டு, எகிப்தின் கெய்ரோ வரை உணரப்பட்டது.

    சில மணிநேரங்களுக்குப் பிறகு, 7.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது அதிர்வு ஏற்பட்டது. இதில் 3,700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போதுவரை 4,200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கால்பந்து

    'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி உலகம்
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! இந்தியா
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025