இடைக்கால பட்ஜெட் உரையில், பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட நிதியமைச்சர்
இன்று, இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, 2010-ல் 20 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இருந்த நிலையில், தற்போது 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், விளையாட்டுத் துறையில் நாட்டின் சாதனைகள் குறித்து பேசினார். "கடந்த ஆண்டு, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை அடைந்தது, இது நாட்டின் உயர் நம்பிக்கை அளவை பிரதிபலிக்கிறது"என்று அவர் கூறினார். இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை வழங்குவதாக இடைக்கால பட்ஜெட் உரையில் சீதாராமன் குறிப்பிட்டார்.