NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி
    ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி

    "இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 10, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் முறையற்ற கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    முன்னதாக, பல்வேறு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை பயன்படுத்தப்பட்ட பிட்ச்களைப் பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    மேலும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், நாக்பூர் ஆடுகளத்தை மோசமானது என்று வர்ணித்தது முதல் இந்தியாவை பிட்ச் டாக்டரிங் என்று குற்றம் சாட்டுவது வரை தொடர்ந்து எதிர்மைறையாகவே செய்தி வெளியிட்டு வந்தன.

    இது கவாஸ்கரை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

    சுனில் கவாஸ்கர்

    ஆஸ்திரேலியாவின் எதிர்மறை பிரச்சாரம் குறித்து கவாஸ்கர் கருத்து

    இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறியிருப்பது பின்வருமாறு :-

    இந்தியாவில் விளையாடுவது மற்றும் கேப்டனாக செயல்படுவதை ரசிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார், ஏனெனில் ஒவ்வொரு பந்து வீச்சும் சவாலானது, ஒவ்வொரு ஓவருக்கும் தன்மை மிக விரைவாக மாறும்.

    ஆனால் சில முன்னாள் வீரர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இதை ஆஸ்திரேலிய ஊடகங்களும் தூபம் போட்டு வளர்க்கின்றன.

    வெளிநாட்டிற்கு வரும்போது சொந்த மண்ணில் இருப்பதுபோல் ஆடுகளம் கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டு விளையாடுங்கள், ஆனால் இந்தியர்களின் நேர்மையை சந்தேகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

    நான் பெருமைமிகு இந்தியன். இந்தியர்களை சந்தேகித்தால் உரிய பதிலடி கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    டெஸ்ட் கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : 14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா! கிரிக்கெட்
    IND vs AUS 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா! கிரிக்கெட்
    தொடர்ந்து மோசமான ஆட்டம்! கே.எல்.ராகுலை இந்திய அணியிலிருந்து கழட்டி விட திட்டம்! கிரிக்கெட்
    குடும்பத்தில் சிக்கல் : அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : 76 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்
    "கோலி களத்தில் தான் அப்படி.. ஆனால் உண்மையில்.." : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக் விளையாட்டு
    INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்
    பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் : என்ன பேசினார் தெரியுமா? விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025