Page Loader
தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல்
தீபக் சாஹர் விரைவில் மீண்டும் போட்டியில் பங்குகொள்வார் என்று ஃப்ளெமிங் கூறினார்

தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 19, 2024
06:36 pm

செய்தி முன்னோட்டம்

CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கினார். அவர் ஒரு 'மைனர்' காயத்தின் பக்கவிளைவுகளால் அவதிப்படுகிறார் என்றும், விரைவில் மீண்டும் போட்டியில் பங்குகொள்வார் என்றும் கூறினார். சிஎஸ்கே அணி, இன்று, IPL தொடரின் 34வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஃப்ளெமிங், சாஹர் நன்றாக இருப்பதாகவும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், தற்போது அவரது மறுவாழ்வு கட்டத்தில் இருப்பதாகவும் கூறினார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னையின் முந்தைய போட்டியில் சாஹருக்கு மாற்றாக வந்த ஷர்துல் தாக்குர் சிறப்பாக செயல்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

embed

இன்றைய போட்டியில் தீபக் சாஹர் விளையாடவில்லை

Deepak Chahar will miss tonight's game against Lucknow Super Giants as well.#CSKvsLSG #LSGvCSK #DeepakChahar pic.twitter.com/OebtlOHqLi— 𝗖𝗿𝗶𝗰 𝗶𝗻𝘀𝗶𝗱𝗲𝗿 (@cric_insiderr) April 19, 2024