Page Loader
பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது இந்தியா
295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 25, 2024
02:33 pm

செய்தி முன்னோட்டம்

பெர்த்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் ஜோஷ் ஹேசில்வுட்டின் (4 விக்கெட்டுகள்) அபார பந்துவீச்சால், முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

534 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தோல்வி

முதல் இன்னிங்ஸ் முடிவில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும், விராட் கோலி 100 (நாட்அவுட்) ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 534 ரன்கள் எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டியின் நான்காவது நாளான இன்று 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம், இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாதனை 

சாதனை வெற்றி

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தனது 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியாக இது மாறியுள்ளது. இதற்கு முன்னர் 1977இல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் வித்தியாசத்தை அடிப்படையில் இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இந்த பட்டியலில் 2008ஆம் ஆண்டு இந்தியாவில் 320 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, பெர்த் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.