
ஊழியர்களுக்கான தினசரி அலவன்ஸை மாற்றியது பிசிசிஐ; புதிய அலவன்ஸ் தொகை எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திருத்தப்பட்ட உள்நாட்டு பயணங்களுக்கான தினசரி அலவன்ஸ் கொள்கையை இறுதி செய்துள்ளது.
இது பல்வேறு துறைகளில் உள்ள அதன் ஊழியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தினசரி அலவன்ஸ்களை வெளியிட உதவுகிறது.
தற்போதுள்ள கட்டமைப்பை மறுஆய்வு செய்ததால் ஜனவரி முதல் இந்தக் அலவன்ஸ்கள் நிறுத்தப்பட்டன.
முன்னர், குறுகிய கால பயணத்திற்கு ரூ.15,000 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) மற்றும் ஐசிசி நிகழ்வுகள் உள்ளிட்ட நீட்டிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களுக்கு ரூ.10,000 தினசரி அலவன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. கூடுதலாக ரூ.7,500 ஒரு முறை தற்செயஸ் அலவன்சும் கொடுக்கப்பட்டது.
மாற்றம்
மாற்றப்பட்ட அலவன்ஸ் தொகை எவ்வளவு?
திருத்தப்பட்ட கொள்கையின் கீழ், தற்செயல் அலவன்ஸ் நீக்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து பயண தொடர்பான கடமைகளுக்கும் ரூ.10,000 நிலையான தினசரி அலவன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், வரி விலக்குகளுக்குப் பிறகு, உண்மையான அலவன்ஸ் ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.6,500 கிடைக்கும்.
நிதி, செயல்பாடுகள் மற்றும் ஊடகங்கள் என பல துறைகள் சமீபத்திய ஐபிஎல் மற்றும் டபிள்யூபிஎல் போட்டிகளுக்கான நிலுவைத் தொகையைப் பெறாததால் இந்த விளக்கம் வந்துள்ளது.
கொள்கை இப்போது முறைப்படுத்தப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள அலவன்ஸ்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கொள்கை பயண காலத்தின் அடிப்படையில் விகிதாசார உரிமைகோரல்களையும் ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி முழு சுற்றுப்பயண பயணத்திற்கு 100%, வரையறுக்கப்பட்ட பயணத்திற்கு 60% மற்றும் பயணம் செய்யாத ஊழியர்களுக்கு 40% வழங்கப்படும்.