NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு 
    சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு

    சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 03, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி ஆடவர் போட்டி இன்று(ஆகஸ்ட்.,3)சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் துவங்கி வரும் 12ம்தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி ஆடவர் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 6 நாட்டின் அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

    அதன்படி, இன்று நடக்கும் முதல் நாள் போட்டியில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதவுள்ளன.

    இப்போட்டி இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் நிலையில், மாலை 6.15 மணிக்கு துவங்கும் 2ம் லீக்-போட்டியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து துவங்கும் 3ம் லீக்-போட்டியில் உலகத்தர வரிசையில் 25ம் இடத்தினை பிடித்துள்ள சீனாவும், 4வது இடத்திலுள்ள இந்தியாவும் மோதுகின்றன என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஹாக்கி போட்டி 

    போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை

    16ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் நடக்கும் இந்த போட்டியினை இந்தியாவுடன் இணைந்து தமிழக அரசு நடத்துகிறது.

    இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு நாளில் நடக்கும் அனைத்து போட்டிகளையும் காண ரூ.300ல்-இருந்து ரூ.400வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    மேலும், இந்த போட்டியினை காண தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல்-கிரிக்கெட்'ஃபேன்பார்க்'போல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இப்போட்டியினை காண மெகா திரைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    வரும் செப்டம்பர் 23ல் இருந்து அக்டோபர் 8ம்தேதி வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெறும் சுற்றாக சீனாவில் ஆசிய விளையாட்டுப்போட்டி அரங்கேறவுள்ள நிலையில் இந்த சாம்பியன்ஷிப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சென்னை

    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    ரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு  ராகுல் காந்தி
    மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழக அரசு

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  தமிழ்நாடு
    வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு  சென்னை
    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு
    ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை  ஓய்வூதியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025