NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்
    அஸ்வின் ரவிச்சந்திரன், தனது தாயார் நோய்வாய்ப்பட்டதைக் கேட்டு நொறுங்கிவிட்டதாக கூறினார்

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2024
    08:35 am

    செய்தி முன்னோட்டம்

    ராஜ்கோட்டில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எப்படி உதவினார்கள் என்பதை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தனது தாயார் நோய்வாய்ப்பட்டதைக் கேட்டு நொறுங்கிவிட்டதாக கூறினார். மனைவியிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டதும், தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரது அணி வீரர்கள், குறிப்பாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய் ஷா ஆகியோர், தான் வீடு திரும்பவும், நோய்வாய்ப்பட்ட தாயுடன் இருக்கவும் எப்படி உதவினார்கள் என்பதை தற்போது தெரிவித்துள்ளார்.

    அன்று நடந்தது

    தனி விமானம் ஏற்பாடு செய்த புஜாரா மற்றும் ஜெய் ஷா

    தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டவுடன், அஸ்வின் சென்னைக்கு ஒரு சார்ட்டர் ஃபிலைட் மூலம் பயணம் செய்தார்.

    இதை ஏற்பாடு செய்தது, சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் ஜெய் ஷா.

    அஸ்வினிடம் செய்தியை சொல்வதற்கு முன், ராஜ்கோட்டை பூர்விகமாக கொண்ட சேட்டேஷ்வர் புஜாராவின் உதவியை நாடியுள்ளார் அஷ்வினின் மனைவி ப்ரித்தி.

    அவர் ஏற்பாடு செய்த சார்ட்டர் விமானத்தில் தான், அஸ்வின் சென்னை விரைந்துள்ளார்.

    அதேநேரத்தில், தான் உடைந்து, செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை அறையில் வந்து சந்தித்தாகவும், மறுசிந்தனையின்றி, வீட்டிற்குச் சென்று தனது தாயை சந்திக்கும்படி தன்னை சமாதானப்படுத்தியதே ரோஹித் தான் என்றும் அஸ்வின் கூறினார்.

    அதுமட்டுமின்றி, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஒருவரையும் தன்னுடன் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    ரோஹித் ஷர்மா
    ராகுல் டிராவிட்

    சமீபத்திய

    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ
    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை! கிரிக்கெட்
    இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது! டெஸ்ட் கிரிக்கெட்
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!! கிரிக்கெட்

    ரோஹித் ஷர்மா

    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : சச்சின், தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித் ஷர்மா? ஆசிய கோப்பை
    'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல் விராட் கோலி
    உலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி

    ராகுல் டிராவிட்

    மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று டெஸ்ட் கிரிக்கெட்
    பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணி
    ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில் ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025