NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு
    அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு

    அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 14, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்று வார முகாமிற்கு 20 இளம் ஆல் ரவுண்டர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

    இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார்.

    உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவாவுக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இடைக்காலத் தலைவர் ஷிவ் சுந்தர் தாஸ் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்திறன் மற்றும் திறமை அடிப்படையில் இந்த வீரர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு வந்துள்ளதை கோவா கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது.

    reason behind calling all rounders

    இளம் வீரர்களை பயிற்சி முகாமுக்கு அழைத்ததன் பின்னணி

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் எமெர்ஜிங் ஆசிய கோப்பை யு-23 தொடர் நடக்க உள்ளது. மேலும் பிசிசிஐ உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களை கவனித்து வருகிறது.

    இந்நிலையில் ஆல் ரவுண்டர்களுக்கு மட்டுமான சிறப்பு முகாம் என்பது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மனின் யோசனை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் இளம் ஆல் ரவுண்டர்களின் திறமையை மெருகூட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.

    இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 2021இல் இந்தியாவுக்காக விளையாடியுள்ள லோயர்-ஆர்டர் பேட்டர் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேத்தன் சகாரியா, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    பிசிசிஐ

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    கிரிக்கெட்

    WTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! ஐசிசி
    WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு! டெஸ்ட் மேட்ச்
    3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி! 2-1 என தொடரையும் வென்றது! ஒருநாள் கிரிக்கெட்
    WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்! ஒடிசா

    கிரிக்கெட் செய்திகள்

    'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ! கிரிக்கெட்
    'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ் டெஸ்ட் மேட்ச்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    அகமதாபாத்தில் மட்டும் வேண்டாம்! ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சம்மதம்? ஒருநாள் கிரிக்கெட்

    பிசிசிஐ

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்! டி20 கிரிக்கெட்
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்! கிரிக்கெட்
    ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025