NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்
    ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்

    ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 04, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    திங்கட்கிழமை (ஜூலை 3) நடந்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவது, ஐ-லீக்கில் புதிதாக அணிகளை சேர்ப்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்திய கால்பந்தின் இரண்டாம் அடுக்கு லீக் போட்டியான ஐ-லீக்கில் ஐந்து புதிய கிளப்புகள் சேர்க்கப்பட உள்ளன.

    முன்னதாக, 2023-2024 சீசனில் இருந்து ஐ-லீக்கில் சேர ஐந்து நிறுவனங்கள் ஏலத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதன் மூலம் அடுத்த சீசனில் இருந்து ஹீரோ ஐ-லீக் போட்டியில் 15 அணிகள் பங்கேற்கும்.

    aiff restores federation cup

    மீண்டும் ஃபெடரேஷன் கோப்பையை நடத்த முடிவு

    கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய அறிவிப்பு ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவதாகும். இது முதன்முதலில் 1977 இல் விளையாடப்பட்டது.

    எனினும், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ-லீக் ஆகியவற்றுடனான கால அட்டவணையில் ஏற்பட்ட மோதலால் இது இடையில் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக சூப்பர் கோப்பை நடைமுறைக்கு வந்தது.

    இந்நிலையில், தற்போது ஃபெடரேஷன் கோப்பையை மீட்டெடுக்க முடிவு செய்துள்ள ஏஐஎப்எப், இந்தியாவின் மதிப்பு மிக்க பிரீமியர் கிளப் போட்டியாக அதை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் தலைவர் கல்யாண் சௌபே, துணைத் தலைவர் என்.ஏ.ஹரீஸ், பொருளாளர் கிபா அஜய், பொதுச் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு பாலியல் வன்கொடுமை
    கோவை நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளப்பெருக்கு அபாயத்தால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை கனமழை
    மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி; ஆபரேஷன் சிந்தூருக்குப் புகழாரம் பிரதமர் மோடி
    இரவில் டெல்லியை உலுக்கிய கனமழை; விமான சேவை மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி

    கால்பந்து

    பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்! கால்பந்து செய்திகள்
    'உலகின் டாப் 5 லீக்குகளில் ஒன்றாக சவூதி புரோ லீக் மாறும்' : கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை! கால்பந்து செய்திகள்
    பார்சிலோனா கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விலகும் ஜோர்டி ஆல்பா! கால்பந்து செய்திகள்
    2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! இங்கிலாந்து

    கால்பந்து செய்திகள்

    லியோனல் மெஸ்ஸி அபாரம்! ஐரோப்பிய லீக்கில் யாரும் எட்டாத சாதனை! கால்பந்து
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து! உலக கோப்பை
    பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! லியோனல் மெஸ்ஸி
    சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்! சவூதி புரோ லீக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025