Page Loader
மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா
மகளிர் ஐபிஎல்லுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா

மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2023
12:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மகளிர் ஐபிஎல்லின் முதல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவித்தது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தொடக்க மகளிர் ஐபிஎல்லில் ஸ்பான்சராக டாடா நிறுவனத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் ஆதரவுடன், பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். மகளிர் ஐபிஎல்லுக்கான டைட்டில் ஸ்பான்சராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டாடா நிறுவனம் செயல்படும். முன்னதாக, கடந்த ஆண்டு, ஆடவர் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை விவோவிடமிருந்து டாடா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஜெய் ஷா ட்வீட்