NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம் 
    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்

    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 08, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தினை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

    இந்த விரிவாக்கப் பணிகளை சீனாவில் உள்ளி சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் சீன அரசின் யாலாங் நதி நீர்மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வந்தன.

    தற்போது அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அந்த ஆய்வகத்தின் செயல்பாடுகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு சீனாவில், நிலப்பரப்பிற்குக் கீழே 2.4 கிமீ ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஜின்பிங் ஆய்வகமானது பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சீனா

    ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்: 

    நிலத்திற்கு கீழே ஆழத்தில் அமைந்திருப்பதால் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காஸ்மிக் கதிர்கள் ஜின்பிங் ஆய்வகத்தில் ஊடுருவியிருக்காது. மிக மிக குறைவான அளவான காஸ்மிக் கதிர்களே அந்த ஆய்வகத்தில் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

    அப்படி இருக்கும் நிலையில், இந்தப் பேரண்டத்தில் நான்கில் ஒரு பங்கு இடத்தை ஆக்கிரமித்திருக்கும் டார்க் மேட்டர் குறித்த ஆய்வுகள் இந்த ஜின்பிங் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தாலியில் உள்ள கிரான் சாஸோ தேசிய ஆய்வகத்தை விட 300,000 கியூபிக் கொள்ளளவுடன் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த ஜின்பிங் ஆய்வகத்தில் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள, ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அறிவியல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சீனா

    புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள் வைரஸ்
    குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்
    சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார் பிரதமர்
    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  இந்தியா

    அறிவியல்

    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்? சந்திரன்
    பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி டெல்லி
    இருண்ட பொருளே இல்லாத விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025