பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு!
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் பயனர்கள் பின்தொடராத தாங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து நிறைய ட்வீட்களைப் பார்த்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க், அதற்கு ஏற்றதுபோல் செலவினத்தை குறைக்க பணிநீக்கத்தையும், ஊழியர்களின் சம்பளத்தையும் குறைத்தார்.
மேலும், ட்விட்டர் பயனர்களுக்கு ஏற்றதுபோல் சில மாற்றங்களையும் கொண்டு வந்தார்.
இந்நிலையில், பல ட்விட்டர் பயனர்கள் தாங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து நிறைய ட்வீட்களைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இது பயனருக்கு மிகவும் பொருத்தமான ட்வீட்களை பரிந்துரைக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், பயனர் பின்தொடராத கணக்குகளிலிருந்து அதிகமான ட்வீட்களை டேப் காட்டுகிறது.
ட்விட்டர் நிறுவனம்
ட்விட்டரில் உள்ள பிரச்சினையால் பயனர்கள் கொந்தளித்துள்ளனர்
மேலும், இந்த ட்வீட்கள் பெரும்பாலும் பயனரின் ஆர்வங்களுடனோ அல்லது அவர்கள் பொதுவாகப் பின்பற்றும் கணக்குகளுடனோ தொடர்பில்லாதவை.
ட்விட்டரின் பயனர் பின்தொடரும் கணக்குகளின் ட்வீட்களைக் காட்டுகிறது. பயனர் ஆர்வமாக இருக்கக்கூடிய ட்வீட்களைப் பரிந்துரைக்க "உங்களுக்காக" தாவல் அல்காரிதங்களைப் பயன்படுத்துகிறது.
புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய இது ஒரு பயனுள்ள அம்சமாகும், ஆனால் அல்காரிதம் துல்லியமாக இல்லாவிட்டால், அது பயனர்களுக்கு விரக்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இதனால், பயனர் அனுபவத்தை மேம்படுத்த ட்விட்டர் அதன் அல்காரிதத்தை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.