NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்
    Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்

    Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 24, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அறிவியல் ரீதியாக ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோமை முதன் முறையாக வரிசைப்படுத்தியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் வாழும் உயிரினங்களில் இரு வகையான குரோமோசோம்கள் காணப்படுகின்றன.

    ஒன்று X குரோமோசோம், மற்றொன்று Y குரோமோசோம். இனப்பெருக்க செயல்பாடுகளில் இந்தக் குரோமோசோம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    ஒரு குரோமோசோம் என்படுவது, மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் DNA-க்களால் ஆனது. இந்த DNA-க்களை குறிப்பிட்ட முறையில் வரிசைப்படுத்துவதன் மூலம் X அல்லது Y குரோமோசோமை நம்மால் பெற முடியும்.

    மேற்கூறிய இரண்டு குரோமோசோம்களில், 2020ம் ஆண்டே X குரோமோசோமை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திய நிலையில், மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட Y குரோமோசோமை தற்போது முழுமையாக வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    மேலும், குரோமோசோம் வரிசைப்படுத்தல் குறித்த ஆய்விதழ் ஒன்று நேச்சர் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    அறிவியல்

    எதற்காக இந்த ஆராய்ச்சி? 

    Y குரோமோசோமின் வரிசைப்படுத்தல் என்பது, மனித மரபணுத்தொகையினை (Genome) புரிந்து கொள்வதில் அடுத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

    இந்த Y குரோமோசோமில் உள்ள சில மரபணுக்களே, விந்தணு உற்பத்தி மற்றும் புற்றுநோய் அபாயத்திற்கும் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குரோமோசோமைப் புரிந்து கொள்வதன் மூலமும், தற்போது இவற்றை வரிசைப்படுத்தியிருப்பதன் மூலமும், ஆண்களிடம் காணப்படும் மலட்டுத்தன்மை குறித்த ஆராய்ச்சிகளுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த ஆய்வில் பங்கெடுத்திருக்கும் National Human Genome Research Institute-ஐச் சேர்ந்த முக்கியமான விஞ்ஞானி ஒருவர் பேசும் போது, "புதிய வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்களும், கணக்கீட்டு வழிமுறைகளுமே தற்போதைய முடிவுகளுக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறிவியல்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025