NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்! 
    பூமி போன்ற கோள்களுக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து

    பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 25, 2023
    08:29 pm

    செய்தி முன்னோட்டம்

    விண்வெளியில் இருந்து பூமி போன்ற கோள்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஆபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    சூப்பர்நோவா என்ற பெருவெடிப்புக்குளாகும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாரும் எக்ஸ்ரே கதிர்கள் 100 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் கோள்களையும் தாக்கி அழிவை உண்டாக்கும் திறனைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்.

    ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்து, பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து கூட அது பிற கோள்களைத் தாக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.

    இதுவரை 31 சூப்பர்நோவா பெருவெடிப்புகளையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர் விஞ்ஞானிகள். அவை சுமார் 160 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள்களிலும் கதிர்வீச்சு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது தெரிய வந்திருக்கிறது.

    விண்வெளி

    என்ன விதமாக பாதிப்புகள்? 

    இதன் மூலம் தாக்கப்படும் பூமி போன்ற கோள்களின் வலிமண்டலத்தின் மொத்த வேதியியலும் மாற்றியமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், அக்கோளின் ஓசோன் போன்ற படலம் இருந்தால், அந்தப் படலமே அழிவதற்கான வாய்ப்பும் இருக்கிறதாம்.

    பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தூரத்தில் இவ்வாறான நட்சத்திரங்கள் எதுவும் தற்போது இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் கடந்த காலத்தில், 2 மில்லியன் முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பூமிக்கு அருகில் 65 - 500 ஒளியாண்டுகள் தொலைவில் இவ்வாறான சூப்பர்நோவா பெருவெடிப்பு ஏற்பட்டதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சூப்பர்நோவாவில் இருந்து வரும் எக்ஸ்ரேவை ஆய்வு செய்வதன் மூலம் நட்சத்திரங்களில் வாழ்க்கை சக்கரத்தைப் பற்றி மட்டுமல்லாது, நம்முடைய பழங்காலத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி

    சமீபத்திய

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு கர்நாடகா
    இந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன? பங்குச் சந்தை
    ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2025
    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு தமிழகம்

    விண்வெளி

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! நாசா
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் நாசா
    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025