NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 17, 2023 | 11:32 am 1 நிமிட வாசிப்பு
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
    காங்கிரஸ் முன்பு ஆஜரான் சாம் ஆல்ட்மேன்

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக காங்கிரஸின் முன்பு நேற்று ஆஜரானார். AI குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்து காங்கிரஸிற்கு விளக்கிச் சொல்ல இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சாம் ஆல்ட்மேன். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு செயலையும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுடனே ஓபன்ஏஐ நிறுவனம் செயல்படத் துவங்கியது, ஆனால் அதே தொழில்நுட்பங்களால் தீவிரமான எதிர்மறை விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, எனத் தெரிவித்திருக்கிறார் ஆல்ட்மேன். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களால் காலநிலை மாற்றம், கேன்சர் போன்ற கடினமான செயல்களுக்கும் தீர்வுகளை கண்டறிய முடியும். ஆனால், அதே சமயம் அவற்றுக்கு கடிவாளம் போடுவதும் அவசியம்.

    சாம் ஆல்ட்மேனின் வாக்குமூலம்: 

    உலக நாடுகளுடன் சேர்ந்து, AI-களுக்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் அமெரிக்கா முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உருவாக்கி, அவை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரவிருப்பதை சுட்டிக்காட்டினார் செனட்டர் ஒருவர். ஜெனரேட்டிவ் AI-களான சாட்ஜிபிடி மற்றும் டால்-இ உள்ளிட்ட AI-களுக்கு சிறப்பு வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டியிருக்கிறது காங்கிரஸ். அவை உருவாக்கும் புகைப்படங்களிலும், பதில்களிலும், அவை இயந்திரத்தால் உருவாக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களால் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியாது. அப்படி ஒரு கண்டுப்பிடிப்பு தற்போது தேவையும் இல்லை, எனத் தெரிவித்திருக்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் எமரிட்டஸ் கேரி மார்க்கஸ்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சாட்ஜிபிடி

    கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2 செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1 செயற்கை நுண்ணறிவு
    கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்! கூகுள்

    செயற்கை நுண்ணறிவு

    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! சென்னை
    AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா? அமெரிக்கா
    என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி? கூகுள்
    கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023