NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
    காங்கிரஸ் முன்பு ஆஜரான் சாம் ஆல்ட்மேன்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 17, 2023
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக காங்கிரஸின் முன்பு நேற்று ஆஜரானார்.

    AI குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்து காங்கிரஸிற்கு விளக்கிச் சொல்ல இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சாம் ஆல்ட்மேன்.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு செயலையும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுடனே ஓபன்ஏஐ நிறுவனம் செயல்படத் துவங்கியது, ஆனால் அதே தொழில்நுட்பங்களால் தீவிரமான எதிர்மறை விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, எனத் தெரிவித்திருக்கிறார் ஆல்ட்மேன்.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களால் காலநிலை மாற்றம், கேன்சர் போன்ற கடினமான செயல்களுக்கும் தீர்வுகளை கண்டறிய முடியும். ஆனால், அதே சமயம் அவற்றுக்கு கடிவாளம் போடுவதும் அவசியம்.

    செயற்கை நுண்ணறிவு

    சாம் ஆல்ட்மேனின் வாக்குமூலம்: 

    உலக நாடுகளுடன் சேர்ந்து, AI-களுக்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் அமெரிக்கா முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    மேலும், ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உருவாக்கி, அவை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரவிருப்பதை சுட்டிக்காட்டினார் செனட்டர் ஒருவர்.

    ஜெனரேட்டிவ் AI-களான சாட்ஜிபிடி மற்றும் டால்-இ உள்ளிட்ட AI-களுக்கு சிறப்பு வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டியிருக்கிறது காங்கிரஸ். அவை உருவாக்கும் புகைப்படங்களிலும், பதில்களிலும், அவை இயந்திரத்தால் உருவாக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

    இந்த தொழில்நுட்பங்களால் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியாது. அப்படி ஒரு கண்டுப்பிடிப்பு தற்போது தேவையும் இல்லை, எனத் தெரிவித்திருக்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் எமரிட்டஸ் கேரி மார்க்கஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சாட்ஜிபிடி

    AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா செயற்கை நுண்ணறிவு
    அமேசான் ChatGPT: மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி! செயற்கை நுண்ணறிவு
    இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி? வாட்ஸ்அப்
    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க் எலான் மஸ்க்

    செயற்கை நுண்ணறிவு

    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  சீனா
    AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா? தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!  தொழில்நுட்பம்
    AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்? கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025