
பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.
அப்படி, இணைக்க தவறினால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயல்படாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏன் கட்டாயம்?
ஒரு நபருக்கு பல்வேறு பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் எனப் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.,
கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவித்தது.
பான் ஆதார் இணைப்பு
பான் கார்டு ஆதார் உடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?
இணைக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்:
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
நிலுவையில் உள்ள வருமான வரிக் கணக்கும் திரும்ப பெற முடியாது.
Defective returns செயல்பாடுகள் தொடர முடியாது.
பான் எண் செயலிழந்து விட்டால் அதிக விகிதத்தில் வரி செலுத்தப் பட வேண்டும்.
இந்த விளைவுகளைத் தவிர, வங்கிகள் போன்ற பிற நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதில் சிரமங்களை மேற்கொள்ளலாம். ஏனெனில் இந்த பரிவர்த்தனைகளுக்கு பான் ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது.
தொடர்ந்து, 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இணைக்க தேவையில்லை.
இணைக்கும் வழி
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.incometax.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு 'Link Aadhaar' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இணைக்கவும்.