NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு, என்ன சொல்கிறார் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ

    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 23, 2023
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

    ஓபன்ஏஐ என்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல, கூகுள் மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களும், ஏனைய குறு நிறுவனங்களும் தற்போது AI-யின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகின்றனர்.

    AI தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் சூழ்நிலையில், அவற்றுக்கு கடிவாளம் போட வேண்டியது மிகவும் முக்கியம்.

    இந்தக் கருத்தையே காங்கிரஸின் முன்பு ஆஜரான போது தெரிவித்திருந்தார் ஓபன்ஏஐயினி சிஇஓ சாம் ஆல்ட்மேன். தற்போது அதே கருத்தையே தங்கள் நிறுவனத்தின் வலைப்பூவில் வெளியிட்டிருக்கும் பதிவிலும் வலியுறுத்தியிருக்கிறார்.

    இன்றைய AI தொழில்நுட்பங்கள் நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனால், நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை இதனைவிட பலமடங்கு திறனைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    செயற்கை நுண்ணறிவு

    புதிய கட்டுப்பாட்டு அமைப்பு: 

    தற்போது இருக்கும் AI தொழில்நுட்பங்கள் மற்றும் நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை கட்டுப்பாட்டில் வைக்க AI நிறுவனங்களும், அனைத்து நாட்டு அரசுகளும் சேர்ந்து முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    அணுஆற்றல் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க அனைத்து நாடுகளும் இணைந்த அமைப்பாக செயல்பட்டு வரும் IAEA போன்ற அமைப்பை AI தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தவும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆல்ட்மேன்.

    அரசுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அதிநவீன் AI தொழில்நுட்பங்கள் சார்ந்த விஷயங்களில் பொதுப்பயனர்களின் கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆல்ட்மேன், அதனை எந்த வகையில் சாத்தியப்படுத்துவது என்பது குறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் வலைப்பூவில் குறிப்பிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சாட்ஜிபிடி

    இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி? வாட்ஸ்அப்
    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் உருவாக்கப்பட்ட பெண் - வைரல்! செயற்கை நுண்ணறிவு
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!  தொழில்நுட்பம்
    AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்? கூகுள்
    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  கூகுள்
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025