NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 23, 2023
    04:01 pm
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு, என்ன சொல்கிறார் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ

    சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஓபன்ஏஐ என்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல, கூகுள் மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களும், ஏனைய குறு நிறுவனங்களும் தற்போது AI-யின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகின்றனர். AI தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் சூழ்நிலையில், அவற்றுக்கு கடிவாளம் போட வேண்டியது மிகவும் முக்கியம். இந்தக் கருத்தையே காங்கிரஸின் முன்பு ஆஜரான போது தெரிவித்திருந்தார் ஓபன்ஏஐயினி சிஇஓ சாம் ஆல்ட்மேன். தற்போது அதே கருத்தையே தங்கள் நிறுவனத்தின் வலைப்பூவில் வெளியிட்டிருக்கும் பதிவிலும் வலியுறுத்தியிருக்கிறார். இன்றைய AI தொழில்நுட்பங்கள் நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனால், நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை இதனைவிட பலமடங்கு திறனைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    2/2

    புதிய கட்டுப்பாட்டு அமைப்பு: 

    தற்போது இருக்கும் AI தொழில்நுட்பங்கள் மற்றும் நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை கட்டுப்பாட்டில் வைக்க AI நிறுவனங்களும், அனைத்து நாட்டு அரசுகளும் சேர்ந்து முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். அணுஆற்றல் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க அனைத்து நாடுகளும் இணைந்த அமைப்பாக செயல்பட்டு வரும் IAEA போன்ற அமைப்பை AI தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தவும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆல்ட்மேன். அரசுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அதிநவீன் AI தொழில்நுட்பங்கள் சார்ந்த விஷயங்களில் பொதுப்பயனர்களின் கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆல்ட்மேன், அதனை எந்த வகையில் சாத்தியப்படுத்துவது என்பது குறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் வலைப்பூவில் குறிப்பிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சாட்ஜிபிடி

    பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை! செயற்கை நுண்ணறிவு
    கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2 செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! தொழில்நுட்பம்
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! சென்னை
    AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா? அமெரிக்கா
    என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி? கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023