NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!
    ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்

    ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 11, 2023
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    AI போட்டியில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சரிசமமாகப் போட்டியிட்டு வருகின்றன. ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்ததையடுத்து, அந்நிறுவனத்திலும் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

    இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் முழுநேர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இது குறித்து தங்கள் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா.

    அந்தக் கடிதத்தில் ஊதிய உயர்வு இல்லை என்றும், போனஸ் மற்றும் ஸ்டாக் அவார்டுகளுக்கான பட்ஜெட்டைக் குறைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் நாதெல்லா.

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் திட்டம் என்ன? 

    கடந்த ஜனவரி மாதம் தான் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    தங்களின் இந்த முடிவுக்கு மாறிவரும் பொருளாதார நிலையை சுட்டிக் காட்டியிருக்கிறார் சத்யா நாதெல்லா.

    தற்போது தங்கள் கவனம் முழுவதையும் ஜெனரேட்டிவ் AI-ஐ மேம்படுத்துவதன் மீது குவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

    கடந்த வாரம் தான் AI வசதியுடன் கூடிய தங்களின் பிங் தேடுபொறி சேவையை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது அந்நிறுவனம்.

    AI வசதியை தங்களுடைய ஆபிஸ் சேவைகளிலும் கொண்டுவரத் திட்டமிட்டு மைக்ரோசாஃப்ட் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைக்ரோசாஃப்ட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025