96.2% சந்திர கிரகணம்! ஆகஸ்ட் 27-28ல் வானில் தோன்றும் அரிய நிகழ்வு: இந்தியாவில் பார்க்க முடியுமா?
செய்தி முன்னோட்டம்
வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிக அபூர்வமான பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த நிகழ்வின் போது நிலவின் 96.2 சதவீத பகுதி பூமியின் அடர்ந்த உம்பா நிழலால் முழுமையாக மறைக்கப்படும். இதன்காரணமாக நிலவு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கலவையில் பிளட் மூன் (Blood Moon) போலக் காட்சியளிக்கும். சர்வதேச அளவில் பல பகுதி மக்கள் இந்த அழகிய விண்வெளி நிகழ்வைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நேரம் மற்றும் காலம்
கிரகணத்தின் நேரம் மற்றும் மொத்த கால அளவு
இந்த சந்திர கிரகணம் ஆகஸ்ட் 27 தாமரை இரவில் தொடங்கி ஆகஸ்ட் 28 அதிகாலை வரை நீடிக்கும்.
கிரகணத்தின் உச்சக்கட்ட நிலை சர்வதேச ஒருங்கிணைந்த நேரப்படி ஆகஸ்ட் 28 அதிகாலை 4:12 மணிக்கு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த கிரகண நிகழ்வும் சுமார் 5 மணி நேரம் 38 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
பூமியின் நிழல் நிலவின் மீது விழும் இந்த நிகழ்வை விண்வெளி ஆய்வாளர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் உற்றுநோக்கத் தயாராகி வருகின்றனர்.
இந்தியா
இந்தியாவில் பார்க்க முடியுமா என்ற விவரம்
துரதிர்ஷ்டவசமாக இந்த ஆகஸ்ட் 2026 சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. கிரகணப் பாதையானது இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளைத் தொடாமல் மிகவும் குறுகலாக விலகிச் செல்கிறது.
இதனால் இந்திய விண்வெளி ஆர்வலர்கள் இந்த நிகழ்வை நேரடியாகக் காணும் வாய்ப்பை இழக்கின்றனர்.
இருப்பினும், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் இந்த சந்திர கிரகணத்தைத் தெளிவாகக் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
பகுதி சந்திர கிரகணத்தின் சிறப்பு அம்சங்கள்
நிலவின் 96.2 சதவீத பகுதி பூமியின் அடர் நிழலுக்குள் சென்றாலும், மிகச்சிறிய பகுதி நிழலுக்கு வெளியே இருக்கும்.
இதன் காரணமாகவே இது முழு சந்திர கிரகணமாக அறிவிக்கப்படாமல் ஆழமான பகுதி சந்திர கிரகணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியே ஊடுருவி நிலவை அடையும் போது, அது வளிமண்டல விலகலால் சிவப்பு நிறமாக மாறி நிலவின் மீது பிரதிபலிக்கிறது.
இதுவே கிரகண நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்கான முதன்மையான அறிவியல் காரணமாகும்.
பாதுகாப்பு
பாதுகாப்பு முறைகள் மற்றும் அடுத்த கிரகண விவரம்
சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை எவ்விதப் பாதுகாப்புக் கண்ணாடிகளும் இன்றி வெறும் கண்களால் நேரடியாகப் பார்க்கலாம்.
இது கண்களுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
வெறும் கண்களாலோ அல்லது பைனாகுலர் உதவியுடனோ திறந்த வெளியில் இருந்து இதனை எளிதாகக் காணலாம்.
இந்த ஆகஸ்ட் கிரகணத்தைத் தொடர்ந்து, அடுத்த சந்திர கிரகணம் 2027 பிப்ரவரி 20 அன்று நிகழவுள்ளது.
அந்த கிரகணம் இந்தியா உட்பட ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தென்படும்.