NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார்

    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 14, 2023
    03:56 pm

    செய்தி முன்னோட்டம்

    திட்டமிட்டிருந்தபடி சரியாக நண்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலத்துடன் விண்ணில் பாயந்தது LVM3 ராக்கெட். இந்தியாவின் பெருமைமிகு சந்திரயான்-3 திட்டத்தின் பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார்?

    சந்திரயான்-3 திட்டத்தின் பின்னாள் இருக்கும் முக்கியமான நபர் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். இஸ்ரோவின் தலைவராக இணைவதற்கு முன், இஸ்ரோவின் ராக்கெட்டுகளை வடிவமைக்கும் மிக முக்கிய நிறுவனங்களான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் லிக்விட் ப்ரொபல்ஷன்ஸ் சிஸ்டம் சென்டர் ஆகிய அமைப்புகளின் இயக்குநராக செயல்பட்டு வந்திருக்கிறார் சோம்நாத்.

    சந்திரயான்-3 திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கியான நபர்களுள் ஒருவர் அதன் திட்ட இயக்குநரான செயல்பட்ட முத்துவீரவேல். இஸ்ரோவில் 30 வருட அனுபவம் கொண்ட இவர், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான்-3

    54 பெண் பொறியாளர்கள் பங்களிப்பு

    விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநரான உன்னிகிருஷ்ணன் நாயர், சந்திரயான்-3 திட்டத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார். சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்தச் சென்ற LVM3 ராக்கெட்டின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

    மேலும், LVM3 ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர்களான S200-ஐ முழுவதுமாக உருவாக்கியது மேம்படுத்தியதும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராக, உன்னிகிருஷ்ணன் இருந்தபோது தான்.

    திட்ட இயக்குநரான முத்துவீரவேலைத் தொடர்ந்து, பணி இயக்குநரான மோகன் குமாரும் சந்திரயான்-3 திட்டதின் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

    சந்திரயான்-3 திட்டத்தில் மேம்பாட்டில் 54 பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நேரடியாகப் பங்காற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    விண்வெளி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  இந்தியா
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து பிரதமர்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் விண்வெளி
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது தமிழிசை சௌந்தரராஜன்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா

    விண்வெளி

    விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!  நாசா
    பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது நாசா
    பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்!  தொழில்நுட்பம்
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா

    இந்தியா

    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? இஸ்ரோ
    ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல்  ஹைதராபாத்
    புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவைகள்
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025