
செமிகிரையோஜெனிக் என்ஜினின் இரண்டாவது வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (ஐபிஆர்சி) அதன் செமிகிரையோஜெனிக் என்ஜினின் குறுகிய கால வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக சனிக்கிழமை (ஏப்ரல் 27) அறிவித்தது.
ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற இந்த சோதனை, மார்ச் 28, 2025 அன்று நடத்தப்பட்ட முதல் வெப்ப சோதனையைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இஸ்ரோ இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், உந்துதல் அறையைத் தவிர அனைத்து இயந்திர அமைப்புகளையும் உள்ளடக்கிய என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகல் 3.5-வினாடி வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று தெரிவித்த்துள்ளது.
முடிவு
சோதனை முடிவு
இஸ்ரோ அறிக்கையின்படி, சோதனையின் போது, என்ஜின் பற்றவைக்கப்பட்டு அதன் மதிப்பிடப்பட்ட சக்தியில் 60 சதவீதம் வரை இயக்கப்பட்டது.
அப்போது நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்திறனை என்ஜின் வெளிப்படுத்தியது.
இந்த சோதனைகள் குறைந்த அழுத்தம் மற்றும் உயர் அழுத்த டர்போ பம்புகள், முன்-பர்னர் மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு வழிமுறைகள் போன்ற முக்கியமான துணை அமைப்புகளின் வடிவமைப்பு ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டை சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட தொடரின் ஒரு பகுதியாகும்.
இந்த மதிப்பீடுகளின் போது சேகரிக்கப்பட்ட தரவு முழுமையான செமிகிரையோஜெனிக் என்ஜினின் செயல்பாட்டு வரிசைமுறையை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
இந்த என்ஜின் சோதனை வெற்றி வரும் ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான விண்வெளி பயணங்களுக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.