NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இன்போசிஸ் நிறுவனர், நாராயண மூர்த்தி தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார்; காரணம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்போசிஸ் நிறுவனர், நாராயண மூர்த்தி தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார்; காரணம் தெரியுமா?
    இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி

    இன்போசிஸ் நிறுவனர், நாராயண மூர்த்தி தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார்; காரணம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2022
    11:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்போசிஸ் நிறுவனத்தின், நிறுவனரும், அதன் முன்னாள் தலைவருமான, நாராயண மூர்த்தி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார்.

    அதில் அவரது நேர மேலாண்மை, நேரம் தவறாமை மற்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம் என்னதை உறுதியாக நம்புவதாகவும் கூறியிருந்தார்.

    'மனி கன்ட்ரோல்' எனும் தனியார் ஊடகத்திற்கு அவர் தந்த பேட்டியில் ஒரு ஆச்சர்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

    நேர்காணலில், மூர்த்தி, இன்போசிஸ்-ஐ உருவாக்க செலவழித்த நேரத்தையும், அது அவரது இரண்டு குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவதை எவ்வாறு குறைத்தது என்று கேட்கப்பட்டது.

    பல ஆண்டுகளாக, தனது அலுவலகத்திற்கு காலை 6:20 மணிக்கு வந்து, இரவு 8 அல்லது 9 மணி வரை வேலை செய்வதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க

    இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் அன்றாட பழக்கம்

    மேலும், அவர் இந்த பழக்கத்தை, 2011 இல் ஓய்வு பெறும் வரை கடைப்பிடித்ததாகவும் தெரிவித்தார்.

    இந்த ஒழுக்கத்தை அவர் கடைபிடிப்பதன் மூலம், இளைஞர் சமூதாயத்திற்கு, சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்வது பற்றிய ஒரு முக்கிய செய்தியை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

    "தொழில் முனைவோர் என்பவர்கள் துணிச்சலானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இது தைரியத்தைப் பற்றியது, தியாகம் பற்றியது," என்றார்.

    தான், இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய போதும், தனது குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல், தியாகம் செய்ய நேரிட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

    மூர்த்தி, தனது துணைவியார் சுதாவை பற்றி "குழந்தைகள் இருவரின் வளர்ச்சிக்கு காரணம் சுதா தான். அவர்களின் அனைத்து சாதனைகளுக்கும் அவர் மட்டுமே காரணம்" என்று பாராட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025