NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா
    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா

    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 29, 2023
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது இந்தியா. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உட்பட பல்வேறு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் டாப் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன.

    இந்தியாவின் GDP-யில் 9.3% பங்களிப்பானது தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்தே வருகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலான செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் எந்தளவிற்கு இருக்கிறது.

    உலகளவில் புதிய செயற்கை நுண்ணறிவுப் புரட்சி ஏற்பட்டு வரும் இந்த வேளையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளிடம் பின்தங்குகிறது இந்தியா.

    செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவுப் புரட்சி: 

    நிதி, சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சீனா புதுமைகளைப் புகுத்தி மேம்படுத்தி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் ஏற்றுக் கொள்ளலில் மிகமிக மெதுவாக இருக்கிறது இந்தியா.

    சீனாவில் அனைத்து வகைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் 50 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 4 பில்லியனுக்கும் குறைவான அளவே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

    2030ம் ஆண்டிற்குள் உலகளாவிய GDPயில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பங்களிப்பு 15 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்போதைய இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த GDP அளவை விட அதிகம்.

    செயற்கை நுண்ணறிவு

    என்ன செய்ய வேண்டும் இந்தியா? 

    தற்போதைய செயற்கை நுண்ணறிவுப் புரட்சியினை அமெரிக்காவும், சீனாவுமே முன்னின்று நடத்திச் செல்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பின்னடைவது, டிஜிட்டலாக அமெரிக்கா மற்றும் சீனாவிடம் நாம் அடிபணிவதற்கு வழிவகுக்கும்.

    போதிய அளவு செயற்கை நுண்ணறிவுக் உட்கட்டமைப்பு மற்றும் அரசின் தலையீடு இல்லாததே இந்தத் துறையில் இந்தியா பின்னடைவை சந்திப்பதற்கான காரணமாக இருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா முன்னெடுக்கும் புதிய முன்னெடுப்புகளும் வெற்றிகரமான அல்லது திருப்திகரமான முடிவுகளையோ, செயல்பாடுகளையோ கொடுப்பதில்லை.

    செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை சரியாகப் பயன்படுத்தி, உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியது மிக மிக அவசியம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    செயற்கை நுண்ணறிவு

    ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து! சாட்ஜிபிடி
    IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI சாட்ஜிபிடி
    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! சாட்ஜிபிடி
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி

    இந்தியா

    இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள் பெண்கள் நலம்
    7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை  உத்தரப்பிரதேசம்
    கனடாவின் காலிஸ்தான் நெட்வொர்க்; ஆதாரங்களை அம்பலப்படுத்திய இந்திய புலனாய்வு அமைப்புகள் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி ஆசிய விளையாட்டுப் போட்டி

    தொழில்நுட்பம்

    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன கூகுள்
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா
    விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வரும் கூகுள் கூகுள்
    இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள் ஆப்பிள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025