Page Loader
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் சுபன்ஷு சுக்லா ஹாம் ரேடியோ மூலம் கலந்துரையாட ஏற்பாடு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் சுபன்ஷு சுக்லா கலந்துரையாட ஏற்பாடு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் சுபன்ஷு சுக்லா ஹாம் ரேடியோ மூலம் கலந்துரையாட ஏற்பாடு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 30, 2025
07:59 pm

செய்தி முன்னோட்டம்

ஆக்சியம்-4 (Ax-4) பயணத்தில் இந்தியாவின் முன்னோடி விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) கர்நாடகாவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் (URSC) நேரடி ஹாம் ரேடியோவில் தொடர்பு கொள்வதன் மூலம் மற்றொரு வரலாற்று மைல்கல்லை படைக்க உள்ளார். இஸ்ரோவால் ஒருங்கிணைக்கப்படும் இந்த மைல்கல் நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களை சுபன்ஷு சுக்லாவுடன் இணைக்கும். இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இளம் மாணவர்களுக்கான ஊக்கமாக இருக்கும். முன்னதாக. சுபன்ஷு சுக்லா ஐஎஸ்எஸ்ஸை அடைந்த முதல் இந்தியர் மற்றும் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளியில் இரண்டாவது இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்த்துள்ளார்.

14 நாட்கள்

14 நாட்கள் ஆய்வு

தற்போது அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் 14 நாள் பணியில் ஈடுபட்டுள்ளார். வரவிருக்கும் வானொலி அமர்வு, இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் விண்வெளி வீரருடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், ஐஎஸ்எஸ்ஸில் உள்ள வாழ்க்கை குறித்து கேள்விகளைக் கேட்கவும், லைவ் விண்வெளி தொடர்பை அனுபவிக்கவும் உதவும். அதிகாரப்பூர்வமாக அமெச்சூர் வானொலி என்று அழைக்கப்படும் ஹாம் வானொலி, பூமியில் உள்ள மக்களுடன் விண்வெளி வீரர்களை இணைப்பதில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அவசர காலங்களில், மொபைல் சிக்னல் இல்லாத இடங்களிலும் கூட, வணிகரீதியான தொடர்புகளை எளிதாக்க இது நியமிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. சுபன்ஷு சுக்லாவுடனான வரலாற்று வானொலி தொடர்பு ஜூலை 4 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:47 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.