NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்

    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 08, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் ஹேக்டிவிஸ்ட் சைபர் தாக்குதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளவுட்செக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    சமூக காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் ஹேக்கிங்குகள் ஹேக்டிவிஸ்ட் (Hacktivist) நிகழ்வுகள் எனப்படுகின்றன. உளகளவில் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்திருந்தாலும், இந்தியாவே பல்வேறு தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருந்திருக்கிறது.

    தொடர்ந்து அதிகரித்து வந்த ஹேக்டிவிஸ்ட் நிகழ்வுகள், கடந்த ஏப்ரல் மாதம் 35% வரை அதிகரித்திருக்கிறது. 2021 முதல் 2023 வரை 67 நாடுகளைக் குறிவைத்து ஹேக்டிவிஸ்ட் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

    இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில், அதிகளவிலான தாக்குதல்கள் இந்தியாவே குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல், போலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பிற உலக நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன.

    சைபர் தாக்குதல்

    என்ன காரணத்தால் அதிகளவில் ஹேக்டிவிஸ்ட் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா? 

    ஹேண்டிவிஸ்ட் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாடுகளில், இந்தியா, இஸ்ரேல், டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் மதத்தினை காரணமாக வைத்து இந்த சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

    போலாந்து, உக்ரைன் மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளில் அரசியல் பிரச்சினைகளைக் காரணமாக வைத்து ஹேக்டிவிஸ்ட் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

    இவ்வகையான தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்பட்டது அரசு நிறுவனங்கள் தான். அதனைத் தொடர்ந்து லாப நோக்கமற்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்டோமொபைல் மற்றும் நிதிச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த ஹேக்டிவிஸ்ட் தாக்குதல்களால் பாதிகப்பட்ட நிறுவனங்கள் தகவல் இழப்பு, நிதி இழப்பு மற்றும் சேவைத் தடை உள்ளிட்ட பிரச்சினைகளைத் சந்தித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது கிளவுட்செக் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 1 தங்கம் வெள்ளி விலை
    போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் சைபர் பாதுகாப்பு
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் மத்திய அரசு

    உலகம்

    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலக செய்திகள்
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா மலேசியா
    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025