NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
    ஐஐடியில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்

    ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 10, 2024
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐஐடி கான்பூரின் சி3ஐஹப் (C3iHub) ஆனது சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    சைபர் பாதுகாப்பில் அதிநவீன திறன்களை வழங்கும் சிறப்பு ஆறு மாத ரெசிடென்ஷியல் படிப்பாக இது கற்றுத் தரப்படுகிறது.

    இந்த படிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

    சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தின் கீழ், நாட்டின் இணையப் பாதுகாப்பு தொடர்பாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளுக்குள் பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களின் சிறப்புப் பிரிவு நிறுவப்படும்.

    இந்த பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்கள் டிஜிட்டல் தளத்தை பாதுகாப்பதில் மத்திய/மாநில அமைப்புகளுக்கு உதவுவார்கள்.

    பயிற்சி

    இந்த பயிற்சி யாருக்கு வழங்கப்படுகிறது?

    பல்வேறு மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகளை சேர்ந்த மொத்தம் 38 அதிகாரிகள் முதற்கட்டமாக இந்த தீவிர பயிற்சி திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    பங்கேற்பாளர்கள் இணைய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களில் விரிவான, நேரடிப் பயிற்சியைப் பெறுவார்கள்.

    சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு சம்பவங்களை நிர்வகிக்கவும், பல துறைகளில் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தவும் இது உதவும்.

    இந்தப் பயிற்சித் திட்டம் இந்தியாவின் இணையப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.

    இது திறமையான நிபுணர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு 

    தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம்

    சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம், டிஜிட்டல் யுகத்தில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாகும்.

    இந்த உயர் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இந்தியாவின் இணைய சூழலை பாதுகாப்பதிலும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    தற்போதைக்கு மத்திய மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு மற்றும் போலீஸ் படைகளில் இருந்து தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எதிர்காலத்தில் இந்த படிப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐஐடி
    சைபர் பாதுகாப்பு
    சைபர் கிரைம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஐஐடி

    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  கல்வி
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! சென்னை
    "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை  மும்பை
    சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு சென்னை

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் கிரைம்

    சைபர் கிரைம்

    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! இந்தியா
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்! இந்தியா
    தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை! கூகுள்

    இந்தியா

    வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி வைரல் செய்தி
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025