
பகவத் கீதை அடிப்படையில் கீதா GPT-யை உருவாக்கிய கூகுள் ஊழியர்!
செய்தி முன்னோட்டம்
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. பிரபலமாகிவிட்ட இந்த சாட்ஜிபிடி போன்று பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கூகுள் இந்தியா மென்பொருள் உருவாக்குநரான சுகுரு சாய் வினீத் , கீதா GPT யை உருவாக்கியுள்ளார்.
இவை GPT-3இல் இயங்கும் திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கையின் கேள்விகளுக்கு தீர்வுகளை உருவாக்க பகவத் கீதையைப் பயன்படுத்துகிறது.
மேலும், இதை பயன்படுத்தி, பகவத் கீதையைப் படிப்பதன் மூலம் AI சாட்பாட் பதிலளிக்கும் கேள்விகளைக் கேட்க மக்கள் கீதா ஜிபிடி பயன்பாட்டைப் https://gita.kishans.in/ இணைப்பில் பயன்படுத்தலாம்.
கீதா ஜிபிடியின் தனித்துவமான நன்மைகளில் ஒன்று, பயனரின் தேடல்கள், கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப பகவத் கீதை விரிவுரைகளைத் தனிப்பயனாக்கும் திறன் கொண்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
உங்கள் கேள்விகளுக்கு கீதையில் இருந்து பதில் தரும் கீதா ஜிபிடி
What if you could talk to the Bhagvad Gita? To Lord Krishna himself?https://t.co/v6svUZ3PWV
— Vineet (@SaiVineet2) January 28, 2023
the holy Song of God, now in your palms. Welcome to the 21st century. pic.twitter.com/VVMEWEgzzZ