NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு
    கிரவுட்ஸ்ட்ரைக்

    கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 05, 2024
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூலை மாதத்தில் உலகளாவிய கணினி செயலிழப்பால் ஏற்பட்ட விரிவான விமான இடையூறுகளுக்கு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் தான் காரணம் என டெல்டா ஏர்லைன்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டை கிரவுட்ஸ்ட்ரைக் மறுத்துள்ளது.

    முன்னதாக கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட தவறான மென்பொருள் அப்டேட்டால் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அந்த மென்பொருளை பயன்படுத்திய டெல்டா ஏர்லைன்ஸ் உட்பட, உலகளவில் மில்லியன் கணக்கான கணினிகளை பாதித்தது.

    இதனால் ஆயிரக்கணக்கான டெல்டா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் குற்றச்சாட்டு குறித்து டெல்டா ஏர்லைன்சிற்கு எழுதிய கடிதத்தில், கிரவுட்ஸ்ட்ரைக் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது மற்றும் தங்கள் நிறுவனம் குறித்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது.

    வழக்கு தாக்கல்

    கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க டெல்டா ஏர்லைன்ஸ் திட்டம்

    சிஸ்டம் செயலிழப்பைத் தொடர்ந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உதவ பல முறை முன்வந்தும் அதற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பதிலளிக்கவில்லை என்று கிரவுட்ஸ்ட்ரைக் விமர்சித்துள்ளது.

    கிரவுட்ஸ்ட்ரைக்கின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் கர்ட்ஸ் தனிப்பட்ட முறையில் டெல்டாவின் சிஇஓ எட் பாஸ்டியனை அணுகியதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கணினி செயலிழப்பால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக பாஸ்டியன் கூறியுள்ளார்.

    ஆனால், கிரவுட்ஸ்ட்ரைக் தனது ஒப்பந்தங்களின் விதிமுறைகளின்படி, நிறுவனத்தின் பொறுப்பு ஒற்றை இலக்க மில்லியன்களில் உள்ள தொகைக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    விமானம்
    உலகம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தொழில்நுட்பம்

    பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு  பணி நீக்கம்
    WWDC 2024: ஆப்பிளின் சிரி AI புதுப்பிப்பைப் பெறுகிறது ஆப்பிள்
    இனி வேலை தேடுவது சுலபம்; AI-துணை கருவிகளை அறிமுகம் செய்த LinkedIn செயற்கை நுண்ணறிவு
    ஆப்பிளின் பேட்டரி சப்ளையரான TDKவின் புதிய சாதனை: திட-நிலை பேட்டரி தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம்  ஆப்பிள்

    தொழில்நுட்பம்

    மண்டை ஓட்டில் பொருத்தப்படும் வலிப்பு சாதனத்தின் முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் இங்கிலாந்து
    GPU டெண்டருடன் AI உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்தியா தயாராகிவிட்டது தொழில்நுட்பம்
    மனித மூளை உயிரணுக்களால் கட்டுப்படுத்தப்படும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்  சீனா
    AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செயற்கை நுண்ணறிவு

    விமானம்

    'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்  அமெரிக்கா
    8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு  சென்னை
    நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி இந்தியா
    மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து  மிசோரம்

    உலகம்

    ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து  தாய்லாந்து
    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்  கனடா
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  குவைத்
    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025