NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது! 
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!

    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது! 

    எழுதியவர் Arul Jothe
    May 17, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெட்ரோ ரயில், பயணிகளுக்கு தங்கள் டிக்கெட்டுகளைப் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

    இதில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் கூகுள் பே உட்பட பல கட்டண விருப்பங்களை பயன்படுத்தி எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

    இன்று முதல் சென்னை மெட்ரோ பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.

    நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகளை அறிமுகப்படுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வாட்ஸ்அப் அடிப்படையிலான இ-டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்குகிறது.

    CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, மெட்ரோ நிர்வாகம் கொடுக்கவுள்ள மொபைல் நம்பருக்கு எங்கிருந்து எங்கே செல்கிறீர்கள் என்ற விவரத்தை அனுப்பி டெபிட் , கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற விருப்பங்களை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என கூறியுள்ளது.

    Metro

    மெட்ரோ ரயில் சேவை

    மெட்ரோ ரயில் சேவைகள் முதலில் தொடங்கியபோது, டோக்கன்களும் ஸ்மார்ட் கார்டுகளும் டிக்கெட்டுகளின் முக்கிய முறைகளாக இருந்தன.

    தொடக்கத்தில் பயணிகள் பெரும்பாலும் டோக்கன்களுடன் சென்றாலும், தற்போது பலரும் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மாறியுள்ளனர்.

    ஏப்ரல் மாதத்தில் 66.85 லட்சம் பயணிகளில், 3.5 லட்சம் பேர் டோக்கன்களையும், 39.8 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டுகளையும் பயன்படுத்தினர்.

    CMRL சமீபத்தில் QR குறியீடு டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.

    QR குறியீடு டிக்கெட்டுகளைத் தவிர, இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான இ-டிக்கெட்டுகள் ஒரு முறை பயணிப்பவர்களுக்கு, ரயில் அல்லது விமானத்தைப் பிடிக்கச் செல்பவர்களுக்கு உதவக்கூடும், ஏனெனில் அவர்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

    தங்கள் கார்டுகளை ரீசார்ஜ் செய்ய நேரமில்லாத பயணிகள் கூட வாட்ஸ்அப் டிக்கெட்டை விரைவாக வாங்கி பயணிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    பயணம்
    பயணம் மற்றும் சுற்றுலா
    ரயில்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வாட்ஸ்அப்

    நீண்ட காலம் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்: புகைப்படங்களை இனி அப்படியே அனுப்பலாம் ஆண்ட்ராய்டு
    சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட 5 சிறப்பு அம்சங்கள் இதோ! தொழில்நுட்பம்
    இனி வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அம்சம் அறிமுகம் ஸ்மார்ட்போன்
    வாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகமாகும் Chatbot - எப்படி செயல்படும்? ஸ்மார்ட்போன்

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது உலகம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    பயணம் மற்றும் சுற்றுலா

    சோலோ ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையா? இதை எல்லாம் நம்பாதீர்கள் பயணம்
    பிசினஸ் ட்ரிப் போக பிளான் இருக்கிறதா? அப்படியென்றால் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பயணம்
    கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ் பயண குறிப்புகள்
    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் சுற்றுலா

    ரயில்கள்

    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்! இந்தியா
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் சென்னை
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025