ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்!
ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களுக்கு குறியீட்டாளர்கள் தங்கள் வேலையை இழக்க நேரும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த infosys நிறுவனர் நாராயண் மூர்த்தி "ஒருபோதும் நடக்காது" என அச்சத்தை போக்கியுள்ளார். மேலும்,நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணமூர்த்தி, "1977-78ல் புரோகிராம் ஜெனரேட்டர்கள் என்று ஒரு விஷயம் இருந்தது. இளைஞர்கள் எல்லா வேலைகளையும் இழப்பார்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அது நடக்கவில்லை..... மனித மனம் மிகவும் நெகிழ்வான கருவி. இது நன்றாக பொருந்தக்கூடியது. இந்த நிரல் ஜெனரேட்டர்களால் கையாள முடியாத பெரிய மற்றும் பெரிய பிரச்சினைகளை மக்கள் தீர்க்கத் தொடங்குவதுதான் நடந்தது. எனவே, ChatGPT நன்றாக உள்ளது, அதை வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.