NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு
    ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

    ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 25, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In).

    ஆப்பிளின் சஃபாரி பயன்படுத்தும் வெப்கிட் ப்ரௌஸர் இன்ஜினில் பல்வேறு கோளாறுகள் இருப்பதைக் கண்டறிந்திருப்பதாக தங்களுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது CERT-In அமைப்பு.

    இந்தக் கோளாறானது ஆப்பிள் சாதனங்களான, ஐபோன், ஐபேடு மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவற்றில் இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமைப்பு.

    இந்தக் கோளாறால், ஆப்பிள் சாதனங்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து, அதன் கண்ட்ரோல்களை முழுமையாகக் கைப்பற்றி, தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது CERT-In அமைப்பு.

    ஆப்பிள்

    எந்தெந்த ஆப்பிள் சாதனங்களில் இந்தக் கோளாறு கண்டறியப்பட்டிருக்கிறது? 

    ஆப்பிள் ஐஓஎஸ் 16.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஐபோன்கள், ஐபேடு ஓஎஸ் 16.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஐபோன்கள் மற்றும் மேக்ஓஎஸ் 12.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் மேக்குகள்.

    வாட்ச்ஓஎஸ் 9.6.3 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச்கள், ஆப்பிள் சஃபாரி 16.6.1 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், மேக்ஓஎஸ் வென்சூரா வெர்ஷன் 13.6 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள்.

    மேற்கூறிய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் சாதனங்களில் CERT-In குறிப்பிட்ட கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கின்றன.

    எனவே, அனைத்து ஆப்பிள் பயனாளர்களும் சமீபத்திய இயங்குதளத்திற்கு தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    ஆப்பிள்

    இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் விசாரணையை சந்திக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்? இந்தியா
    ஐபோனில் 'மியூட் பட்டனு'க்குப் பதிலாக 'ஆக்ஷன் பட்டனை'க் கொண்டு வரும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு விடுத்த எச்சரிக்கை! ஆப்பிள் நிறுவனம்
    இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம்
    ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல் ஆப்பிள் நிறுவனம்
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025