NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
    ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை வெளியிடும் இணையதளங்களுக்கு தடை

    ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய குடிமக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உட்பட, தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சில இணையதளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது.

    இந்த தகவல் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), இந்த இணையதளங்களில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்ததை அடுத்து, இந்த இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

    இதில் சில இணையதளங்கள் மக்களின் தரவை மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

    காவல்துறை

    காவல்துறையில் புகார்

    ஆதார் சட்டம், 2016இன் கீழ் ஆதார் தொடர்பான விவரங்களை பொதுவில் காட்டுவதை தடை செய்யும் விதியை மீறியதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.

    மேலும், "இந்த இணையதளங்களின் பகுப்பாய்வில் இருந்து சில பாதுகாப்பு குறைபாடுகளை CERT-In வெளிப்படுத்தியுள்ளது.

    ஐசிடி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும் அவர்கள் மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட இணையதள உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் புகார் அளிக்கவும், இழப்பீடு பெறவும் தீர்ப்பளிக்கும் அதிகாரியை அணுகலாம்.

    மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பச் செயலர்களுக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது." என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    பான் கார்டு
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    மத்திய அரசு

    கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் மருத்துவக் கல்லூரி
    இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு இன்ஃபோசிஸ்
    வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 FDC மருந்துகளுக்கு மத்திய அரசு தடை இந்தியா
    சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஓய்வூதியம்

    இந்தியா

    42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கு வங்காளம்
    நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு திருப்பதி
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் அமெரிக்கா
    இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு விமானப்படை

    பான் கார்டு

    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! இந்தியா
    ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு மத்திய அரசு
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    மனிதர்களைப் போல டேபிள் டென்னிஸ் விளையாடும் கூகுளின் புதிய ரோபோ டேபிள் டென்னிஸ்
    எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களை AI கணிக்க முடியுமா? ஆம் என்கிறது அறிவியல் உலகம் செயற்கை நுண்ணறிவு
    ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் சேர்க்க திட்டம்; சோதனை ஓட்டம் தொடக்கம் இன்ஸ்டாகிராம்
    போதிய வரவேற்பு இல்லாததால் பெயிண்ட் 3டி செயலிக்கு நவம்பர் 4 முதல் ஓய்வு; மைக்ரோசாப்ட் அறிவிப்பு மைக்ரோசாஃப்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025