LOADING...
"தனியுரிமையில் சமரசம் இல்லை": கட்டாயமாக்கப்பட்ட 'சஞ்சார் சாத்தி' செயலி உத்தரவை எதிர்க்கும் ஆப்பிள்
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆப்பிள் நிறுவனம் எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

"தனியுரிமையில் சமரசம் இல்லை": கட்டாயமாக்கப்பட்ட 'சஞ்சார் சாத்தி' செயலி உத்தரவை எதிர்க்கும் ஆப்பிள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 02, 2025
04:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் (ஐபோன் உட்பட) 'சஞ்சார் சாத்தி' என்ற அரசால் இயக்கப்படும் சைபர் பாதுகாப்புச் செயலியை முன்கூட்டியே நிறுவும்படி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆப்பிள் நிறுவனம் எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கைகளை சமரசம் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை ஆப்பிள் நிறுவனம் உறுதியாக எடுத்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்புத் துறை (DoT), சாம்சங், சியோமி உள்ளிட்ட அனைத்து மொபைல் தயாரிப்பாளர்களும் 'சஞ்சார் சாத்தி' (தகவல்தொடர்பு பங்குதாரர்) என்ற செயலியைத் தங்கள் சாதனங்களில் முன்கூட்டியே நிறுவுவதைக் கட்டாயமாக்கி நேற்று உத்தரவிட்டது. எனினும் அது கட்டாயமில்லை என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.

காரணம்

ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்ப்புக்கான காரணம்

தனது உலகளாவிய கொள்கைகள் மற்றும் இயங்குதளத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவுக்கு இணங்க முடியாது என்று ஆப்பிள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் எந்தவொரு அரசும் கட்டாயப்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை தங்கள் சாதனங்களில் முன்கூட்டியே நிறுவ ஆப்பிள் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்குகிறது என்கிறது. ஆப்பிள் அதன் iOS இயங்குதளத்தின் மீதும், ஆப் ஸ்டோர் மீதும் கடுமையான கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. அரசின் செயலியை வற்புறுத்தி நிறுவுவது, ஐபோன்களின் பாதுகாப்பு அமைப்பின் மைய கோட்பாடுகளைப் பலவீனப்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.

Advertisement