டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்!
இந்திய கலை கண்காட்சி, 2023 பிப்ரவரி 9 மற்றும் 12 க்கு இடையில் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், மூன்று டிஜிட்டல் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஆப்பிள் இந்தியாவில் 'Today At Apple' அமர்வுகளை அறிமுகப்படுத்தினர். மேலும், ஆக்மென்டட் ரியாலிட்டி, 3டி லிடார் ஸ்கேனிங், அனிமேஷன், ஒலி தொகுப்பு மற்றும் ஐபேட்களில் கோடிங் போன்ற தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் கலைப்படைப்புகளை உருவாக்கியதற்காக மூன்று இந்திய கலைஞர்களை ஆப்பிள் சிஇஓ டிம் குக் பாராட்டியுள்ளார். கலைஞர்களான, மீரா ஃபெலிசியா மல்ஹோத்ரா, வருண் தேசாய் மற்றும் கௌரவ் ஒகலே ஆகியோரின் புகைப்படங்களையும் குக் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர்களின் படைப்புகளுடன் டிஜிட்டல் கலை எவ்வாறு மிகவும் ஆழமான கதைசொல்லலுக்கு உதவுகிறது என்பதைக் காட்டுகிறது எனத்தெரிவித்துள்ளார்.