NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்; இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் முன்னிலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்; இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் முன்னிலை
    இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்

    எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்; இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் முன்னிலை

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏர்டெல் ஆதரவு பெற்ற ஒன்வெப், இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் புரட்சியில் முதல் நிறுவனமாக களமிறங்க தயாராகி வருகிறது.

    இந்த நிறுவனம் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு கிட்டத்தட்ட தயாராகியுள்ள நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறது.

    ஒன்வெப் அதன் இரட்டை பூமி நிலைய நுழைவாயிலை லோ எர்த் ஆர்பிட் செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க விரைவான அனுமதிக்காக தொலைத்தொடர்புத் துறையை அணுகியுள்ளது.

    25 நாடுகளில் செயல்பாட்டு வரும் ஒன்வெப், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் விரிவடைந்து வருகிறது.

    இந்தியாவில், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பூமி நிலைய நுழைவாயில்களை நிறுவ திட்டமிட்டுள்ளது, இது இரு கடற்கரைகளிலும் விரிவான கவரேஜை உறுதி செய்கிறது.

    அனுமதி

    உலகளாவிய மொபைல் தனிநபர் தொடர்பு அனுமதி

    ஒன்வெப் ஏற்கனவே செயற்கைக்கோள் சேவைகள் மூலம் உலகளாவிய மொபைல் தனிநபர் தொடர்பு (GMPCS) அனுமதியைப் பெற்றுள்ளது.

    இது அதன் சேவையைத் தொடங்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டவுடன், ஏர்டெல்லின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் செயல்பாட்டுக்கு வரும்.

    இது இந்தியாவை செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கான பிராந்திய மையமாக மாற்றும்.

    இதற்கிடையில், ஸ்டார்லிங்க் இன்னும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக, குறிப்பாக GMPCS அனுமதிக்காக காத்திருக்கிறது.

    எலான் மஸ்க் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தியாவின் விண்வெளி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விவாதித்த போதிலும், ஸ்டார்லிங்க் சேவை கிடைப்பது உறுதியற்றதாகவே உள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில், ஏர்டெல்லின் ஒன்வெப் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர்டெல்
    செயற்கைகோள்
    எலான் மஸ்க்
    இந்தியா

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் தொழில்நுட்பம்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ

    எலான் மஸ்க்

    பாத்ரூம் செல்லும் போதும் கூட 20 பாடி கார்டு உடன் செல்லும் எலான் மஸ்க் வணிகம்
    நீங்கள் block செய்த பயனர்கள் உங்கள் பொது போஸ்ட்களைப் பார்க்க முடியும்: Xஇல் புதிய வசதி எக்ஸ்
    இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில் இத்தாலி
    X-இல் இனி Bold, Italics ஸ்டைல் ஃபான்ட்ஸ் பயன்படுத்தமுடியாது எக்ஸ்

    இந்தியா

    ராணுவ விமானத்தில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கிய டிரம்ப் அமெரிக்கா
    அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தினசரி 12 மணி நேர வேலை என மாற்ற திட்டமா? மத்திய அரசு கூறுவது என்ன மத்திய அரசு
    ₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா ரத்தன் டாடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025