Page Loader
பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு
மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு

எழுதியவர் Siranjeevi
Jan 17, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

இனி வரும் மின்சார வாகனங்களுக்கு 2025 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத நான்கு சக்கர வாகனத்திற்கும் ஏற்கனவே 50 வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிட்டு இருந்தன. இந்நிலையில், அனைத்து பேட்டரி மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறையும் என்ற நிலை நிலவுகிறது.

வரிச்சலுகை

100 சதவீதம் வரிச்சலுகையை செலுத்த வேண்டும்

எனவே, மாசுபாட்டை குறைக்க, எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க அரசு இந்த ஆணையை பிறப்பித்திருக்கலாம். தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் பின்வரும் உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன் படி, 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுக்கு நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிப்பு சட்டம் 1974, பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியே, அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உத்தரவு வெளியிட்டுள்ளது.