NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2025
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025 அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் உருவாகி வரும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் குறித்து, இளைஞர்களிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.

    பாரம்பரியமாக வயதான மக்களைப் பாதிக்கும் ஒரு நிலையாகக் கருதப்படும் உயர் இரத்த அழுத்தம், இப்போது 20 மற்றும் 30 வயதுடைய இந்தியர்களை ஆபத்தான விகிதத்தில் பாதிக்கிறது.

    2024 ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, 40 வயதுக்குட்பட்ட பெரியவர்களில் 20% க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தத்துடன் வாழ்கின்றனர்.

    அமைதியான கொலையாளி

    உடலின் முக்கிய உறுப்புக்களை அமைதியாக சேதப்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்

    பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுனில் எஸ் போஹ்ரா, உயர் இரத்த அழுத்தம் முக்கிய உறுப்புகளை அமைதியாக சேதப்படுத்தும் என்றும், இது அமைதியான கொலையாளி என்ற முத்திரையைப் பெறுகிறது என்றும் எச்சரிக்கிறார்.

    மன அழுத்தம், மோசமான தூக்கப் பழக்கம் மற்றும் அதிகப்படியாக மொபைல் பார்ப்பது, பெரும்பாலான நேரங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது போன்ற வாழ்க்கை முறைகள் ஆகியவை இந்த சுகாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாகும்.

    2025 அப்பல்லோ ஹெல்த் ஆஃப் நேஷன் ரிப்போர்ட் மேலும் வெளிப்படுத்துகிறது, உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 9% பேரும் கல்லூரி மாணவர்களில் 19% பேரும் ஏற்கனவே இந்த ஆபத்தில் உள்ளனர்.

    கொழுப்பு கல்லீரல் நோய்

    நான்கில் மூன்று பங்கு கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்பு

    இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் வகையில், நான்கில் மூன்று பங்கு உயர் இரத்த அழுத்தம் கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்புடையதாக உள்ளது.

    இது உணவுமுறை, மன அழுத்தம் மற்றும் டிஜிட்டல் அடிமையாதல் ஆகியவற்றின் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இதை எதிர்த்துப் போராட, நிபுணர்கள், வழக்கமான இரத்த அழுத்த கண்காணிப்பு, சீரான குறைந்த சோடியம் உணவு, தினசரி உடல் செயல்பாடு, யோகா அல்லது தியானம் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பது என இந்த ஐந்து எளிய தடுப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்துகிறார்கள்.

    இளம் இந்தியர்கள்

    இளம் இந்தியர்களுக்கு அறிவுரை 

    இந்த உலக உயர் இரத்த அழுத்த தினத்தன்று, இளம் இந்தியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சீக்கிரமே பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    குறிப்பாக இளைஞர்களிடையே, முன்னெச்சரிக்கை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு, நீண்டகால அபாயங்களைக் கணிசமாகக் குறைத்து, எதிர்காலத்திற்கு சிறந்த இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறப்பு செய்தி
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    சிறப்பு செய்தி

    வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை அமெரிக்கா
    பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம் பொங்கல்
    மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்!  இந்தியா
    உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் உலகம்

    ஆரோக்கியம்

    டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஸ்மார்ட்வாட்ச்கள்; ஆய்வு முடிவில் வெளியான தகவல் நீரிழிவு நோய்
    தினமும் காலையில் துளசி சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? உடல் நலம்
    தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா? சரும பராமரிப்பு
    இந்த புத்துணர்ச்சியூட்டும் பழங்களுடன் இயற்கையாகவே நீரேற்றம் பெறுங்கள் ஆரோக்கியமான உணவு

    உடல் ஆரோக்கியம்

    இனிப்பு சாப்பிட்டபின் தண்ணீர் குடிப்பது நல்லதா? உண்மை இதுதான் ஆரோக்கியம்
    அதிகாலை வாக்கிங் செல்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்கும், தெரியுமா? உடல் நலம்
    இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதுமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை நீரிழிவு நோய்
    காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள் ஆரோக்கியம்

    உடல் நலம்

    2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 45 கோடியைத் தொடும்: ஆய்வு உடல் பருமன்
    டாட்டூ குத்துவதால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்குமா? அதிர்ச்சியடைய வைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் புற்றுநோய்
    நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்; கண்டிப்பாக இதையெல்லாம் புறக்கணித்துவிடாதீர்கள் நீரிழிவு நோய்
    எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்; தற்காத்துக் கொள்வது எப்படி? நீரிழிவு நோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025