NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு
    தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு

    தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கைத்தறித்தொழில் பலநூறு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ளது என்று கூறப்படுகிறது.

    அந்த காலத்தில் இந்திய பாரம்பரியம் கைத்தறியின் கலைநயம் கொண்டு பிரதிபலிக்கப்பட்டது.

    ஆனால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் தயார் செய்த ஆடைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததால் நமது நாட்டின் கைத்தறித்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த ஆடைகள் இறக்குமதி காரணமாக இந்திய நெசவாளர்களுக்கு வேலையில்லாமல் போனது,அச்சமயத்தில் தான் 1905ம்ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒருபகுதியாக 'சுதேசி இயக்கம்' துவக்கப்பட்டது.

    இந்த இயக்கத்தின் நோக்கம் யாதெனில், மக்களுக்கு இந்த இறக்குமதி மீதான நம்பிக்கையினை போக்கி, உள்நாட்டு தயாரிப்பினை மேம்படுத்துவதே ஆகும்.

    இந்த முயற்சியின் ஒரு பங்களிப்பாகவே ஒவ்வொரு வீட்டிலும் 'காதி' என்னும் கைத்தறி உடைகளை தயாரிக்க துவங்கியுள்ளனர்.

    கைத்தறி 

    கைத்தறி நெசவாளர்களுள் 70%க்கும் அதிகமானோர் பெண்கள்

    இதன் விளைவாக, இந்தியாகேட் அருகேயுள்ள இளவரசி பூங்காவில் 'நள்ளிரவு நேரத்தில்' ஜவஹர்லால் நேரு காதியால் நெய்யப்பட்ட இந்திய நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றினார்.

    சுதேசி இயக்கம் ஆகஸ்ட் 7ம்தேதி நிறுவப்பட்டதால் அன்றையத்தினம் தேசிய கைத்தறித்தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2015ம்ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி முதல் இந்த தேசிய கைத்தறித்தினம் சென்னையில் இந்திய அரசால் துவங்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இன்றையத்தினம் தேசிய கைத்தறித்தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    இந்தியாவின் சமூகப்பொருளாதார முன்னேற்றத்தின் ஓர்அங்கமாக கைத்தறித்துறை இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வாகவே இத்தினத்தினை மத்திய ஜவுளி அமைச்சகம் கொண்டாடுகிறது.

    கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையப்பணிகளில் 70%க்கும் அதிகமானோர் பெண்கள்.

    அதனால் பெண்கள் நலம் கருதியும், அவர்களை மேம்படுத்தி நன்றித்தெரிவிக்கவும் இந்நாள் நல்வாய்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெண்கள் நலம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வருமான வரி விதிகள்
    இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியிருக்கிறது நாய்ஸ் கேட்ஜட்ஸ்

    பெண்கள் நலம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள் பெண்கள் ஆரோக்கியம்
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை பெண்கள் ஆரோக்கியம்
    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025