NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு 

    மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 19, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    மாணவர்களின் நடத்தை மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்ய இங்கிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வகுப்பறைகளில் இடையூறுகளைக் குறைப்பதற்காகவும் மாணவர்களின் நடத்தையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது,

    "பள்ளிகள் குழந்தைகள் கற்கும் இடங்களாகும். ஆனால், மொபைல் போன்கள் வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மொபைல் போன்களை தடை செய்வதன் மூலம் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையில் கவனம் செலுத்த முடியும்." என்று கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து

    தடையை அமல்படுத்துவதற்கு நான்கு வெவ்வேறு யோசனைகள் 

    இங்கிலாந்து முழுவதும் உள்ள அனைத்து வகுப்பறைகளும் ஒரே விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதலை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    "பாடம் கற்பிக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் கூட மொபைல் போன்கள் தடை செய்யப்பட வேண்டும் " என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

    தடையை அமல்படுத்துவதற்கு நான்கு வெவ்வேறு வழிமுறைகளை கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

    முதலாவது யோசனை: மொபைல் போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு பள்ளிக்கு வருவது.

    இரண்டாவது யோசனை: பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஆசிரியர்களிடம் அவைகளை ஒப்படைப்பது.

    மூன்றாவது யோசனை: மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து பள்ளியின் பாதுகாப்பான சேமிப்பகத்தில் வைத்திருப்பது.

    நான்காவது யோசனை: கைகளில் மொபைல் போன்களை வைத்திருந்தாலும் அதை உபயோகிக்காமல் இருப்பது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகள்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    இங்கிலாந்து

    இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம் பிரிட்டன்
    இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா? இந்தியா
    பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி சீனா
    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025