LOADING...
சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! செமாக்ளுடைடு விலை ₹11,000லிருந்து ₹2,200 ஆகக் குறைவு
செமாக்ளுடைடு விலை ₹11,000லிருந்து ₹2,200 ஆகக் குறைவு

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! செமாக்ளுடைடு விலை ₹11,000லிருந்து ₹2,200 ஆகக் குறைவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
02:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செமாக்ளுடைடு மருந்தின் விலை பெருமளவு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஓசெம்பிக் மற்றும் விகோவி என்ற பெயர்களில் விற்கப்படும் இந்த மருந்தின் காப்புரிமை இந்தியாவில் மார்ச் 20, 2026 அன்று முடிவுக்கு வந்ததையடுத்து, இந்திய மருந்து நிறுவனங்கள் இதன் மலிவு விலை பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. கூடுதல் விவரங்கள் இங்கே:-

பின்னணி

விலை வீழ்ச்சியின் பின்னணி

இதற்கு முன்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மருந்தின் ஒரு மாத சிகிச்சைக்கான செலவு சுமார் ₹11,000 ஆக இருந்தது. தற்போது சைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனம் ஒரு மாத சிகிச்சைக்கு வெறும் ₹2,200 என்ற விலையில் இந்த ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது. சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், லூபின் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சந்தையில் இறங்குவதால், இதன் விலை வரும் காலங்களில் ₹1,500 முதல் ₹2,500 வரை குறையக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

செயல்பாடு

செமாக்ளுடைடு எப்படிச் செயல்படுகிறது?

இந்த மருந்து உடலில் உள்ள GLP-1 என்ற ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. வயிறு காலியாவதைத் தாமதப்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையில் 10-15% வரை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மாரடைப்பு அபாயத்தை 26% வரையிலும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 39% வரையிலும் குறைப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

எச்சரிக்கை

மருத்துவர்களின் எச்சரிக்கை

விலை குறைந்துள்ளதால் மக்கள் தாங்களாகவே இந்த மருந்தைப் பயன்படுத்துவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குமட்டல், வாந்தி போன்ற பொதுவான பிரச்சனைகள் முதல் கணைய அழற்சி மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒரு 'Prescription' மருந்து என்பதால், மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே அளவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.

Advertisement

ஆதிக்கம்

இந்திய மருந்து நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கம்

இந்த விலை குறைப்பு இந்திய நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் காப்புரிமை இன்னும் அமலில் இருப்பதால், அங்கு மக்கள் அதிக விலை கொடுத்து இந்த மருந்தை வாங்குகின்றனர். ஆனால், இந்தியா தனது ஜெனரிக் மருந்து உற்பத்தித் திறனின் மூலம் இதனை சராசரி மக்களுக்கும் எட்டும் வகையில் மாற்றியுள்ளது.

Advertisement