NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி ஸ்பெஷல்: கொலுவை ஏன் ஒன்பது படிகளில் வைக்கிறோம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி ஸ்பெஷல்: கொலுவை ஏன் ஒன்பது படிகளில் வைக்கிறோம்?
    கொலு பொம்மைகளை ஏன் 9 படிகளில் வைக்கிறோம் தெரியுமா?

    நவராத்திரி ஸ்பெஷல்: கொலுவை ஏன் ஒன்பது படிகளில் வைக்கிறோம்?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 17, 2023
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    நவராத்திரி என்பது நாடு முழுவதும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் 9 நாள் சிறப்பு பூஜையாகும்.

    நவராத்திரின் போது, தமிழகத்தில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம்.

    ஆனால், இந்த கொலு பொம்மைகளை ஏன் 9 படிகளில் வைக்கிறோம் தெரியுமா?

    அதை தெரிந்துகொள்வதற்கு முன், 9 படிகளில் என்னென்ன பொம்பைகள் வைக்கப்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

    முதல் படி: ஓரறிவு ஜீவன்களான மரம், செடி, கொடி மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் பொம்மைகள் பொதுவாக முதல் படியில் வைக்கப்படுகின்றன.

    இரண்டாவது படி: இரண்டறிவு ஜீவன்களான நத்தை, சங்கு போன்றவற்றின் பொம்மைகள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றன.

    மூன்றாவது படி: மூன்றறிவு உயிரினங்களான எறும்பு, கரையான் போன்றவற்றின் பொம்மைகள் மூன்றாம் படியில் வைக்கப்படுகின்றன

    பிஜேகோவெ

    நான்காவது படி:

    நான்கறிவு கொண்ட வண்டு, பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளின் பொம்மைகளுக்கான இடம் இது.

    ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட உயிரினங்களான விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகள் இந்த படியில் வைக்கப்படுகின்றன.

    ஆறாவது படி: ஆறறிவு கொண்ட உயிரினமாக கருதப்படும் மனிதர்களின் பொம்மைகள் ஆறாவது படியில் வைக்கப்பட வேண்டும்.

    ஏழாவது படி: புனிதர்கள், சந்நியாசிகள் போன்றவர்களின் உருவ பொம்மைகள் இந்த படியில் வைக்கப்படுகின்றன.

    எட்டாவது படி: சந்நியாசிகளை விட மேன்மையவர்களாக போற்றப்படும் தேவர்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கான படி இது.

    ஒன்பதாவது படி: மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் அவர்களது தேவியர்களுக்கான இடம் இது.

    எனவே, பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் எப்படி தெய்வமாக வேண்டும் என்பதை விளக்கவே 9 படிகளில் கொலு வைக்கப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    திருவிழா

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025