மனநலம்: மனநலத்தை சுற்றி உலவும் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்
முற்காலத்தை போல் அல்லாமல், இப்போது மனநலத்தை பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். மனம் ஆரோக்கியமாக இருக்க பல வழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சூழலில், மனநலனைப் பற்றி உலவும் 5 கட்டுக்கதைகளை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்: கட்டுக்கதை 1: மனநோய் என்பது பலவீனத்தின் அடையாளம் மனநோய், பலவீனமானவர்களை தான் பீடிக்கும் என்பது பொய். இது உடல்வலிமைக்கு சம்மந்தம் இல்லாதது. மாறாக, மனநல நிலையை ஏற்றுக்கொள்ளும் வலிமையையும், சிகிச்சை பெறுவதற்கான தைரியத்தையும் குறிக்கிறது. கட்டுக்கதை 2: மனநலப்பிரச்சினைகள் என்றென்றும் நீடிக்கும் அனைத்து மனநோய்களும் தீர்க்க முடியாதது அல்ல. பலவற்றை, சரியான அணுகுமுறை மூலம் குணப்படுத்தலாம். உங்கள் மனநோயினைப் பொருத்தும், அதற்குத் தரப்படும் ஆலோசனைகளை பொருத்தும், உங்களுக்கு தீர்வு கிடைக்கும் நேரம் வேறுபடும்.
மனநோயாளிகள் பைத்தியக்காரர்கள் அல்ல
கட்டுக்கதை 3: 'நேர்மறையாக' இருந்தால் மட்டுமே குணமடைய முடியும் "Staying positive" என்பது நல்லதுதான். எனினும், ஒரு குறிப்பிட்ட மனநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு, நோயாளி தனது பிரச்சினையின் மூல காரணத்தை எதிர்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு, மருத்துவ உதவியுடன் அதிலிருந்து மீள வேண்டும். கட்டுக்கதை 4: மனநோயாளிகள் அனைவரும் பைத்தியக்காரர்கள் மனநோய், யாரையும் பைத்தியம் ஆக்குவதில்லை. எண்ணங்களும், மனதின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுகிறதே தீவிர, அவரை பைத்தியமாக மாற்றாது. கட்டுக்கதை 5: மனநல மருந்துகள் தீங்கு விளைவிப்பவை: மனநல மருந்துகள் நெடுங்காலம் உட்கொண்டால், உடல்நலம் பாதிக்கும் என்பது பொய். மற்ற உடல் நோய்களுக்கு, மருந்தும், சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலத்திற்கும், மருந்து முக்கியம். அவை மனநோய்க்கான அறிகுறிகளை குறைத்து, மனநிலையை சீராக்க உதவும்.