கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்
கோடை காலத்தில், அதிக வெப்பம் மற்றும் வறட்சித்தன்மை காரணமாக நமது சருமத்திற்கு கூடுதல் கவனமும், கவனிப்பும் தேவைப்படுகிறது. நம்மில் பலர், நம் சருமப் பராமரிப்பில் சில தவறுகளை தெரியாமல் செய்வதால், அது பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த தோல் பராமரிப்பு தவறுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். படுக்கைக்கு முன் மேக்கப்பை நீக்குவதில்லை: உங்கள் முகத்தில் இருந்து மேக்அப்பை அகற்றவது சோம்பறித்தனமாக தோன்றலாம். ஆனால் இது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஒப்பனை அணியும்போது, அது, உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய்கள், அழுக்குகள் மற்றும் மாசுகளுடன் கலந்து, உங்கள் சருமத்தின் மீது ஒரு அடுக்காக உருவாகிறது. இந்த அடுக்கு உங்கள் துளைகளை அடைத்து, கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவது முக்கியம்
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில்லை: வெளியில் செல்லும் போது, தினசரி SPF அடங்கிய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும், நீரேற்ற அளவைப் பராமரிக்கவும் உதவும். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதில்லை: சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதைப் போலவே மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதும் முக்கியமானது. அது வறட்சி மற்றும் மென்மையான தன்மைக்கு வழிவகுக்கும். உங்கள் தோல் வகைக்கு பொருந்தாத தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்: உங்கள் சருமத்திற்கு ஏற்றார் போல மேக்அப் மற்றும் குளியல் சாதனைகளை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், முகப்பரு, வறட்சி அல்லது அதிகப்படியான எண்ணெய்த்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். சரும மருத்துவரை அணுகி, உங்கள் சரும வகைக்கென, தனிப்பட்ட பரிந்துரையைப் பெறுவது முக்கியம்.