NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
    தமிழகத்தில் அதிகரிக்கும் "ஸ்க்ரப் டைபஸ்" காய்ச்சல்

    தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 02, 2025
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    "ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று, தமிழகத்தில் பரவிக் கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் "ஸ்க்ரப் டைபஸ்" பரவல் அதிகரித்துள்ளது.

    அதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.

    இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும், இந்த தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டதும், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காரணம்

    இந்த நோய் தொற்றுக்கான காரணம்?

    இந்த நிலைமையைப் பற்றி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ரிக்கட்ஸியா" என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது இந்த "ஸ்க்ரப் டைபஸ்" நோய் தாக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனினும் இது மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவாது.

    விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பூச்சி கடிக்க கூடிய சூழல்களில் இருக்கும் நபர்களுக்கு, இந்த நோயின் பாதிப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

    அறிகுறிகள்

    இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?

    காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் இந்நோயின் முக்கிய தன்மைகள் ஆகும்.

    வீரியத்தை பொறுத்து, உடல்வலி, தசைவலி, கடித்த இடத்தில் கருமையான சிரங்கு போன்ற பகுதி, மன மாற்றங்கள், விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள், சொறி, வியர்த்தல், கண்களில் ரத்தம், நுரையீரல் தொற்று, வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தோன்றக்கூடும்.

    சிகிச்சை

    சிகிச்சை முறைகள் இவை தான்

    "ஸ்க்ரப் டைபஸ்" காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு "அசித்ரோமைசின்", "டாக்ஸிசைக்ளின்" போன்ற ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    அதன் பிறகும், உடல் நிலை மேம்படாவிட்டால், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், ரத்த நாளம் மூலம் திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை வழங்க வேண்டும்.

    தேவையெனில், உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்.

    இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், "ஸ்க்ரப் டைபஸ்" பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் தொடர் கனமழை: 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தமிழ்நாடு செய்தி
    டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம் திருவண்ணாமலை
    கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வெள்ளம்
    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார் தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம் மகளிர் ஐபிஎல்

    சுகாதாரத் துறை

    தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்  மு.க ஸ்டாலின்
    நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை  நீலகிரி
    'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்  கொரோனா
    இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025