NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
    வாழ்க்கை

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 26, 2023, 09:49 am 1 நிமிட வாசிப்பு
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
    42 ஆண்டுகளாக மூடப்பட்ட 'பேய்' ரயில்வே ஸ்டேஷன்

    மேற்கு வங்காளத்தின், புருலியா மாவட்டத்தில், ராஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி பிரிவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் பேய் உலவுவதாக, 42 ஆண்டுகளாக செயல்பாடற்று கிடக்கிறது என உங்களுக்கு தெரியுமா? திகில் படங்களில் மட்டுமே கேள்விப்படும் இது போன்ற செய்திகள், நடைமுறையிலும் இருக்கிறது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அந்த 'பேய்' நடமாடும் ஸ்டேஷன் பெயர் பெகுன்கோடர். அந்த ரயில் நிலையத்தில் பேய் இருப்பதாக ஊருக்குள் செய்தி உலவுவதை அடுத்து, அந்த ஸ்டேஷனுக்கு யாருமே பணி செய்ய செல்வதில்லையாம். அதேபோல அங்கு பணிக்கு செல்ல ஒருவரும் சம்மதிக்கவில்லையாம். அதனால், கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக, அந்த ரயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.

    பரபரப்பான ஸ்டேஷனில் பேய் வந்தது எப்படி?

    கோப்புகளின்படி, இந்த ரயில்நிலையம், 1960-களில் ஒரு பரபரப்பான நிலையமாக தான் இருந்துள்ளது. சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால், ஊர்மக்களின் வசதிக்காக இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. தகவல்கள்படி, 1967-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தின் அப்போதைய ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் பாதையில் ஒரு பேய் உருவத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார். ஸ்டேஷன் மாஸ்டரின் கூற்றுப்படி, அந்த பேய் உருவம், வெள்ளைநிற சேலை அணிந்திருந்தது. அதோடு, அந்த ரயில் பாதையில் உலவி கொண்டிருந்தது. இந்த வதந்தி, அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. மேலும் சில விஷமிகளும் அதே போல கூறவே, ஊர் மக்கள், அதை நம்ப ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    வைரல் செய்தி
    மேற்கு வங்காளம்

    வைரல் செய்தி

    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? தமிழ்நாடு

    மேற்கு வங்காளம்

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில்  இந்தியா

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023