NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
    42 ஆண்டுகளாக மூடப்பட்ட 'பேய்' ரயில்வே ஸ்டேஷன்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 26, 2023
    09:49 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின், புருலியா மாவட்டத்தில், ராஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி பிரிவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் பேய் உலவுவதாக, 42 ஆண்டுகளாக செயல்பாடற்று கிடக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

    திகில் படங்களில் மட்டுமே கேள்விப்படும் இது போன்ற செய்திகள், நடைமுறையிலும் இருக்கிறது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த 'பேய்' நடமாடும் ஸ்டேஷன் பெயர் பெகுன்கோடர். அந்த ரயில் நிலையத்தில் பேய் இருப்பதாக ஊருக்குள் செய்தி உலவுவதை அடுத்து, அந்த ஸ்டேஷனுக்கு யாருமே பணி செய்ய செல்வதில்லையாம். அதேபோல அங்கு பணிக்கு செல்ல ஒருவரும் சம்மதிக்கவில்லையாம்.

    அதனால், கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக, அந்த ரயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.

    வைரல் செய்தி

    பரபரப்பான ஸ்டேஷனில் பேய் வந்தது எப்படி?

    கோப்புகளின்படி, இந்த ரயில்நிலையம், 1960-களில் ஒரு பரபரப்பான நிலையமாக தான் இருந்துள்ளது.

    சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால், ஊர்மக்களின் வசதிக்காக இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது.

    தகவல்கள்படி, 1967-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தின் அப்போதைய ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் பாதையில் ஒரு பேய் உருவத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார்.

    ஸ்டேஷன் மாஸ்டரின் கூற்றுப்படி, அந்த பேய் உருவம், வெள்ளைநிற சேலை அணிந்திருந்தது. அதோடு, அந்த ரயில் பாதையில் உலவி கொண்டிருந்தது. இந்த வதந்தி, அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. மேலும் சில விஷமிகளும் அதே போல கூறவே, ஊர் மக்கள், அதை நம்ப ஆரம்பித்துவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    வைரல் செய்தி

    "உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம் தமிழ் திரைப்படம்
    'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா கோலிவுட்
    நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி கோலிவுட்
    இது அது இல்ல! மீண்டும் வைரலாகும் கோர்டன் ராம்சேயின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலான ட்வீட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025