Page Loader
காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?
நெய் மனித உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் வழங்குகிறது.

காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?

எழுதியவர் Srinath r
Dec 05, 2023
03:47 pm

செய்தி முன்னோட்டம்

நாம் நம், பெரும்பான்மையான பாட்டி காலத்து மருத்துவங்களை புறந்தள்ளி வந்தாலும், அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதை சரியாக பயன்படுத்துவதன் மூலம், பெரும்பான்மையான சமயங்களில் நோய் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடிகிறது. அதில் ஒன்றுதான் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவது. இது, சரும பிரச்சனைகளில் தொடங்கி செரிமானம் வரை பலவற்றிற்கும் நமக்கு உதவுகிறது. இந்த கலவையை உட்கொள்வதின் நன்மைகள் குறித்து, இந்த தொகுப்பில் நாம் அறிவோம்.

2nd card

செரிமானத்தை மேம்படுத்துகிறது

காலையில் வெந்நீரில் நெய் சேர்த்து பருகுவதின், முக்கியமான மருத்துவ குணங்களில் ஒன்றாக செரிமானம் கூறப்படுகிறது. இது நம் செரிமானத்தை அதிகரித்து, நமது உடல் வேலை செய்ய துவங்க உதவுகிறது. இக்கலவை செரிமான அமைப்புக்கான மசகு(lubricant)எண்ணெய் போல் செயல்பட்டு, ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதை ஊக்குவித்து, மலச்சிக்கல், வீக்கம், வாய்வு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது. செரிமான நொதிகள்(என்சைம்களின்), உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

3rd card

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உணவில் நெய் சேர்த்து உண்பது எடையை அதிகரிக்க கூடும் என்ற பயத்தை ஏற்படுத்தினாலும், அது முற்றிலும் தவறான நம்பிக்கை. சத்தான கொழுப்புகளான நெய், உணவின் முழுமைத்தன்மை மற்றும் திருப்தி உணர்வை ஏற்படுத்தி, நாம் அதிகமாக உணவருந்துவதை தடுக்கிறது. மேலும், நெய்யை வெந்நீருடன் கலந்து பருகுவது, நமது உடல் இயக்கங்களை வேலை செய்ய வைப்பதின் மூலம் கொழுப்பை கரைக்கிறது. இது நீங்கள் சில கிலோக்களை குறைக்க உதவும்.

4th card

உங்கள் சருமத்திற்கு நல்லது

உங்கள் சருமமும் நெய்யினால் கிடைக்கும் பல நன்மைகளை அனுபவிக்கிறது. நெய் ஊட்டமளிக்கிறது, இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதன் வயதாவதை எதிர்க்கும் பண்புகள் மற்றும் நச்சு நீக்கும் பண்புகள், சருமத்தை மிருதுவாக்கி இயற்கையான பொலிவை பெற உதவுகிறது. வெந்நீர் மற்றும் நெய் கலவை, உங்கள் தோலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி வழங்கி, குணப்படுத்தவும் செய்கிறது.

5th card

 உங்கள் மூட்டுகளை உயவூட்டுகிறது(lubrication)

உங்கள் மூட்டுகளில் வலி அல்லது வீக்கத்தை நீங்கள் அனுபவித்து வந்தால், வெந்நீரில் நெய் கலந்து அருந்துவது உங்களுக்கு பல வழிகளில் உதவலாம். இது உங்கள் மூட்டுகளுக்கு உயவூட்டுவதின் மூலம், உங்கள் மூட்டுகளுக்கு அதிகப்படியான இயக்கம் மற்றும் நெகிழ்வுத் தன்மை கிடைப்பதனால், நீங்கள் விழுவதையும், விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.மேலும், நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூட்டுகளுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.